India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமானப் பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. இதில், விடுபட்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்ட நிலையில், 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 15 முதல் அவர்களது வங்கிக் கணக்கிலும் ₹1000 வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை ஒரு நாள் முன்னதாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதிலுரை நிகழ்த்தினார். இதை தொடர்ந்து, மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளார். நீட் மோசடி குறித்து சிறப்பு விவாதம் வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்திய நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனாலை, பன்சிலால், கவுதம் ஆகிய இருவரும் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கியதும், அதில் நீரை கலந்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. வழக்கு விசாரணைக்காக, இதுவரை யாருக்கும் சம்மன் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் ஜவான் படம் மூலம் கால் பதித்த இளம் இயக்குநர் அட்லி, அடுத்ததாக சல்மான் கானுடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு ஹீரோக்கள் நடிக்கும் வகையில் அதிரடி ஆக்சன் கதையம்சத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மாணவர் அணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் நீட் தேர்வை சுவரெழுத்து பிரசாரத்தை மர்ம நபர்கள் சிலர் முன்னெடுத்துள்ளனர். அதில், “நீட்டை விலக்கு, இல்லையென்றால் தமிழகம் இந்தியாவை புறக்கணிக்கும்” என எழுதியுள்ளனர்.
இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். மக்களவையில் உரையாற்றிய அவர், இந்துக்களை அவமதிப்பதை காங்கிரஸ் ஃபேஷனாக கருதுவதாகவும், இந்துக்களை டெங்கு, மலேரியாவுடன் திமுக ஒப்பிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சனாதனத்தை அவமதித்தது காங்., கூட்டணியில் உள்ள திமுகதான் என்றார். இதனிடையே, மணிப்பூருக்கு நீதி கேட்டு, எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
உலகின் மிக நீளமான சைக்கிளை நெதர்லாந்தைச் சேர்ந்த 8 பொறியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 180 அடி 11 அங்குலம் நீளமுள்ள இந்த சைக்கிள், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. டச்சு பொறியாளர்கள் குழுவின் தலைவரான இவான் ஷால்க் (39) தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என கனவு கொண்டிருந்தார். அந்த கனவை இப்போது அவர் நனவாக்கியுள்ளார்.
தேசத்தின் வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவையில் 2.15 மணி நேரம் உரையாற்றிய அவர், 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஒன்றாக இணைந்து உழைக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தனது அரசும், குரலும் வலிமையாக இருப்பதாக கூறி நீண்ட உரையை முடித்துள்ளார். இதை தொடர்ந்து, பாஜக எம்.பிக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.
மக்களவையில் ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ராகுல் காந்தி பேசியதன் அர்த்தத்தை திசை திருப்பி, அவர் இந்துக்களுக்கு எதிரானவராக காண்பிக்க மோடியும், அமித்ஷாவும் முயற்சிக்கின்றனர்” என குற்றம் சாட்டியுள்ளார்..
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியானது. மாய உலகத்தில் நிகழும் பிரமாண்ட காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல திரை அனுபவத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. வெளியான 5 நாள்களில் உலகம் முழுவதும் ₹500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், அசாத்தியமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவை இயக்குநர் அட்லி மனதார பாராட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.