news

News July 4, 2024

‘ராயன்’ படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு

image

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘ராயன்’ படத்தின் “ராயன் Rumble…” என்ற பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தனுஷின் 50ஆவது படமாக தயாராகிவரும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வடசென்னை கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

News July 4, 2024

5 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். இதனிடையே, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

News July 4, 2024

ரோஹித் அழுததை வாழ்நாளில் மறக்க முடியாது: கோலி

image

தான் முதன்முறையாக ரோஹித் அழுது பார்த்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய அவர், தாங்கள் 15 ஆண்டுகளாக விளையாடி வருவதாகவும், ஆனால், ரோஹித் ஷர்மா அழுது அன்றுதான் தான் முதன்முறையாக பார்த்ததாக நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். தன் வாழ்நாளில் அந்த நாளை மறக்க முடியாது என்றார்.

News July 4, 2024

தமிழகத்தில் அரசியல் மாற்றம்: அண்ணாமலை

image

தமிழகத்தில் இடைத்தேர்தல் மூலம் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விக்கிரவாண்டி பரப்புரையில் பேசிய அவர், தமிழகத்தில் மது இருக்க கூடாது என்று போராடும் பாமக இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவின் சாட்சியாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருப்பதாக கூறிய அவர், இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடையும் என்றார்.

News July 4, 2024

பாஜக தான் உண்மையான ஒட்டுண்ணி: காங்கிரஸ்

image

பிராந்திய கட்சிகளை சாப்பிட்ட பாஜகதான் உண்மையான ஒட்டுண்ணி என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். கூட்டணி வைத்து கட்சிகளை அழிப்பது பாஜகவுக்கே பொருத்தமாக இருக்கும் என்ற அவர், இந்த ஒட்டுண்ணி வேலையை பிஜு ஜனதா வரை பாஜக தொடர்கிறது என்றார். நேற்று முன்தினம் மக்களவையில் பேசிய மோடி, காங்கிரஸ் மாநில கட்சிகளை ஒட்டுண்ணிகளை போல் சார்ந்துள்ளது என்று விமர்சித்திருந்தார்.

News July 4, 2024

ஷாலினி உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்

image

நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் உடல்நிலை சீராக உள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை நடந்ததைத் தொடர்ந்து தற்போது அவர், மருத்துவர்கள் கண்காணிப்பில் வழக்கமான பணிகளை மேற்கொள்ளவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மனைவி ஷாலினியை பார்க்க அஜர்பைஜான் ஷூட்டிங்கிலிருந்து சென்னைக்கு அஜித் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

News July 4, 2024

சுசித்ராவுக்கு த்ரிஷா பதிலடி?

image

ஜெயலலிதாவோடு த்ரிஷாவை ஒப்பிட்டு சுசித்ரா பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், விஜய் கட்சியில் த்ரிஷா இணைய இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால், உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதீர்கள் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

₹125 கோடி காசோலை கொடுத்த BCCI

image

டி20 உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மும்பை நகர வீதிகளில் பெருந்திரளான மக்கள் குழுமியிருக்க, பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ( BCCI) சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் வீரர்களுக்கு ₹125 கோடி காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக பிரதமர் மோடியைச் சந்தித்து அணியினர் வாழ்த்து பெற்றனர்.

News July 4, 2024

அதிமுக பிரமுகர் உடலுக்கு இபிஎஸ் அஞ்சலி

image

சேலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் உடலுக்கு, இபிஎஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த சண்முகத்தை, நேற்று இரவு சிலர் வெட்டி கொலை செய்தனர். இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகி சதீஷ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், சண்முகம் வீட்டிற்கு நேரில் சென்ற இபிஎஸ், அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News July 4, 2024

வீரர்களுடன் உரையாடிய பிரதமர்

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க, 5 தமிழர்கள் உள்பட 28 தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீரஜ் சோப்ரா வழிநடத்த உள்ளார். இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட தடகள வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நமது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை பெருமைபடுத்துவார்கள் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!