India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போகி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே பள்ளிகளுக்கு இன்று (ஜன.14) கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் அறிவித்துள்ளார். இதனால் கல்லூரிகளுக்கும் 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். எனவே, வெளியூரில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்லத் தயாராகிவிட்டனர்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வரும் 19-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிப்.4, 5-ம் தேதிகளில் அண்ணா அறிவாலயத்தில் துறை சார்ந்த குழுக்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து குடிமக்களின் குரலாக தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்றும் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை, மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பனை காண லட்சக்கணக்கான பக்தர்கள், தற்காலிக கூடாரங்கள் அமைத்து அங்கே தங்கியுள்ளனர். மகரஜோதியை காண சபரிமலையை சுற்றி 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், கோயிலுக்குள் 30,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் இயங்கும் AI மென்பொருளை உருவாக்க சர்வம் AI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்த ₹10,000 கோடி முதலீடு 1,000 பேருக்கு உயர் தொழில்நுட்ப வேலை வாய்ப்பை உருவாக்கும். உலகத்திற்கான தயாரிப்பை தமிழகம் உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதன்மூலம், சங்க காலத்திற்கு பிறகு டிஜிட்டல் சங்க காலத்தை உருவாக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ராஜ்யசபா MP பதவிகாலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், மாநில அரசியலில் கவனம் ஜி.கே.வாசன் முடிவெடுத்துள்ளாராம். அதனால், NDA கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்டு EPS-க்கு ஜி.கே.வாசன் ஷாக் கொடுத்துள்ளதாக தமாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு பின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை தயார் செய்ய உள்ளதாகவும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

▶ஜனவரி 14, மார்கழி 30 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

கடைசியாக நடந்த 5 ODI போட்டிகளிலும் கோலி 50+ ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில், இன்றையை NZ-க்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தால், தொடர்ச்சியாக 6 ODI-களில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைப்பார். தற்போது சச்சின், டிராவிட், ரோஹித், ரஹானே ஆகியோருக்கு நிகராக கோலி இருக்கிறார். இந்த பட்டியலில் 9 முறை 50+ ரன்களை அடித்து PAK வீரர் ஜாவித் மியாண்டாட் முதலிடத்தில் உள்ளார்.

<<18833393>>அண்ணாமலை<<>> மும்பைக்கு வந்தால் கால்களை வெட்டுவேன் என ராஜ்தாக்கரே கூறியதை சீமான் கண்டித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக கால்களை வெட்டுவேன் என கூறுவதை ஏற்க முடியாது எனவும், அண்ணாமலை தனி நபரல்ல, தமிழ்த்தேசிய இனத்தின் மகன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக அவருக்கு துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவான பொங்கல் பண்டிகையை வரவேற்கும் திருநாளாக போகி பண்டிகை உள்ளது. பழையன கழிதலும், புதியன புகுதலுமாக நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ள இத்திருநாளில், பழைய துன்பங்கள் நீங்கி, புதிய தொடக்கத்தை தொடங்க Way2News வாசகர்களை வாழ்த்துகிறோம். அறுவடை திருநாளின் ஆரம்ப நாளில் அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம் பொங்கும் பொங்கலை வரவேற்போமாக.

இந்தியா Vs நியூசிலாந்து இடையே 2-வது ODI போட்டி இன்று பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இன்றைய போட்டியிலும் வென்றால் தொடரை கைப்பற்றும். தொடரை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் நியூசிலாந்து இன்று கடுமையாக போராடும். எனவே பரபரப்பான ஆட்டத்திற்கு பஞ்சமிருக்காது. எந்த அணி வெல்லும் என நினைக்கிறீங்க கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.