India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆசிய கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வெல்ல காரணமாக விளங்கிய ‘கண்ணகி நகர்’ கார்த்திகாவை, மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக களமிறங்கி தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 சவரன் நகையை பரிசாக அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஊழல் மாடல் ஆட்சியின் அவலத்தை திசைதிருப்பவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டதாக தவெகவின் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். நேற்று வேலைவாய்ப்பில் ஊழல், இன்று மணல் கொள்ளையில் மவுனம், திமுகவின் கபட நாடகத்தை தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், 2026-ல் மக்கள் நிச்சயம் திமுகவிற்கு தகுந்த பாடத்தை புகுட்டி வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

திருமண உறவோ, காதல் உறவோ, பெரும்பாலான உறவுகள் சில ஆண்டுகளில், ஏன் சில மாதங்களிலேயே கசந்து விடுகின்றன. அதற்கு பின்வருபவை முக்கிய காரணங்கள்: *பரஸ்பரம் மரியாதை தராதது *சீரற்ற செயல்பாடு *ஏமாற்றுதல் *இணையை ஸ்பெஷலாக உணர செய்யாதது *வாக்குறுதியை மீறுதல். இந்த பிரச்னைகளை சரிசெய்தால் உங்கள் வாழ்க்கை அழகாக மாறும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். SHARE IT

விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார் என நடிகர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். விஜய்க்கு தோல்வி என்பதே கிடையாது என்றும், நல்ல மாமனிதர் அவர் எனவும் பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்ஜிஆர் சின்ன குழந்தைகள் மனதில் இடம்பிடித்து CM ஆனார். அதேபோல் விஜய்யும் குழந்தைகள் மனதில் இடம்பிடித்துள்ளார். நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வீட்டில் நாய் வளர்ப்பது ஒரு அழகான அனுபவமாகும். இதற்கு பொறுப்பும் நேரமும் தேவை. நாயை அன்புடன் கவனித்தால் அது வாழ்நாள் முழுவதும் நம்மை நம்பிக்கையுடன் நேசிக்கும். வீட்டில் நாய் வளர்ப்பதற்கு முன் தெரிந்திருக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு நாய் பிடிக்குமா? கமெண்ட் பண்ணுங்க.

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க.

தாய்லாந்தில், ‘வாடகை மனைவி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. பட்டாயா போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் வெளிநாட்டினர், அங்குள்ள பார்கள், நைட்கிளப்கள், ரெஸ்டாரன்ட்ஸில் உள்ளூர் பெண்களை சந்தித்து, பிடித்தால் வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். மனைவியாகவோ, கேர்ள் ஃபிரண்டாகவோ கொஞ்ச நாள் இருக்க ₹1 லட்சம் முதல் ₹1 கோடி வரை கட்டணம் வாங்குகிறார்களாம். சில நேரம் வாடகை மனைவி நிரந்தர மனைவியாக மாறுவதும் உண்டாம்.

பாஜகவின் தேர்தல் செயல்பாடுகள், பிரசாரங்களை பார்க்க டென்மார்க், ஆஸ்திரேலியா, பூடான், தென்னாப்பிரிக்கா, UK, ஜப்பான், இந்தோனேசியா நாட்டு தூதர்கள் பிஹாருக்கு இன்று முதல் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பது, முக்கிய தொகுதிகளுக்கு பயணிப்பது உள்ளிட்ட பணிகளை தூதர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதற்கு முன்பு குஜராத், இமாச்சல் தேர்தல்கள் நடந்த போதும் அவர்கள் பயணித்துள்ளனர்.

தங்கத்தை போன்று வெள்ளியை அடகு வைத்தும் கடன் பெறும் வசதி 2026 ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, கடனை திருப்பி செலுத்திய பிறகு அடகு வைத்த பொருள்களை உடனடியாக வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளைக்கும் ₹5,000 அபராதம் செலுத்தி வாடிக்கையாளரிடம் நகையை ஒப்படைக்க வேண்டும் என வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.