news

News November 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். ▶பொருள்: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

News November 3, 2025

இந்தியா சாம்பியன்.. வரலாற்று தருணங்கள் PHOTOS

image

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணிக்கு அரசியல் பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய மகளிர் அணி சாம்பியனாக உருவெடுத்த வரலாற்று தருணங்களை போட்டோக்களாக SWIPE செய்து பார்க்கவும்.

News November 3, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 3, ஐப்பசி 17 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

News November 3, 2025

இந்திய அணிக்கு PM மோடி வாழ்த்து

image

மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று வெற்றியானது பல எதிர்கால சாம்பியன்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தொடர் முழுவதும் ஒரு குழுவாக இந்திய அணியினர் சிறப்பாகவும், உறுதித்தன்மையுடனும் செயல்பட்டதாக PM மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்த வெற்றி லட்சக்கணக்கான பெண்களுக்கு ஊக்கமாக அமையும் என அமித்ஷா கூறியுள்ளார்.

News November 3, 2025

தீப்தி சர்மாவுக்கு தொடர் நாயகி விருது

image

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் கலக்கிய தீப்தி சர்மாவுக்கு தொடர் நாயகி விருது வழங்கப்பட்டுள்ளது. நடப்பு WC தொடரில் அவர் 9 போட்டிகளில் 215 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 22 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆல் ரவுண்டராக ஜொலித்துள்ளார். இறுதிப்போட்டியில் தீப்தி சர்மா லாரா வோல்வார்ட், ஜாஃப்டா, ட்ரயான், டி கிளெர்க், அன்னேரி டெர்க்சென் ஆகிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News November 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News November 3, 2025

மழைக் காலத்தில் இதை கவனியுங்க…

image

பைக், கார் வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வண்டிக்கு தேவையான காப்பீடு அம்சங்களை உள்ளடக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி (காலாவதி ஆகாமல்) இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். மழையில் வாகனம் அழுக்காக போகிறது என்பதால், மழை முடிந்தபின் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என அசட்டையாக இருந்தால், பழுது ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள். SHARE IT

News November 3, 2025

நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பொழியும்

image

நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், T.V.மலை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News November 3, 2025

நீங்கள் இறந்தது போன்ற கனவு வருகிறதா?

image

தூங்கும் போது நீங்கள் இறப்பது போல் கனவுகள் வந்தால் அச்சம் வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப் போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப் போகிறோம் என்பதுதான். இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இதுபோன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம். மாற்றம் நல்லதுக்கு தான் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

error: Content is protected !!