India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநரும், நடிகருமான மனோஜ் குமார் அண்மையில் காலமானார். இதேபோல், நடிகர் நாகேந்திரன் நேற்று திடீரென மரணமடைந்தார். மேலும் நடிகர்கள் கராத்தே ஹூசைனி, ரவிகுமார், நடிகை பிந்து கோஸ், இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி, தயாரிப்பாளர் ராமநாதன், டிவி நடிகர் யுவராஜ் நேத்ரன் ஆகியோரும் அண்மையில் மரணமடைந்தனர்.
DC-யின் ஓப்பனர் ஃபாப் டு பிளெசிஸ் காயத்திலிருந்து மீண்டுள்ளார் . அவர் இன்று டெல்லியில் RCB-க்கு எதிரான மேட்சில் விளையாட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் அணியில் இடம் பெறும் பட்சத்தில், DC-யின் பேட்டிங் இன்னும் பலம் பெறும். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்ற RCB-க்கு எதிரான போட்டியில் காயமடைந்த அவர், தொடர்ச்சியாக 4 மேட்சில் விளையாடவில்லை.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான CUET UG நுழைவுத் தேர்வின் 2025-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24-ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு உத்தேசமாக மே 8 முதல் ஜூன் 1-க்குள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த தேர்விற்கான அட்டவணை தற்போது வரை வெளியாகவில்லை. அதேநேரம், மே 4-ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதால், CUET தேர்வு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலை கண்டு இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது என்றும், ஒவ்வொரு இந்தியரின் இதயமும் நொறுங்கிவிட்டதாகவும் மான் கி பாத் உரையில் PM மோடி உணர்ச்சிபொங்க கூறியுள்ளார். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களின் கோழைத்தனத்தையே இந்த தாக்குதல் பிரதிபலிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். காஷ்மீரில் அமைதி திரும்பிய நேரத்தில், மீண்டும் அதனை அழிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
கடந்த 2 நாள்களாக Loc-யில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. நேற்றும் நள்ளிரவில், டுட்மரி கலி (tutmari gali) மற்றும் ராம்பூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை இந்திய ராணுவம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாகவும்.
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாக். மீது பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனால், கோவை, திருப்பூரில் தொழில்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஆயத்த ஆடை தயாரிப்பில் பாக். நமக்கு போட்டி நாடே தவிர, இதனால் பாதிப்பில்லை என வர்த்தகர்கள் கூறியுள்ளனர். மேலும், இதனால் எல்லைப் பகுதியில் மட்டுமே பிரச்னை என்றும், உக்ரைன், ரஷ்யா போரிலும் நமக்கு பின்னடைவும் இல்லை என்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என PM மோடி கூறியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்வதேச தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர் எனக் கூறினார். முழு உலகமும் நம்முடன் நிற்கிறது என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி புகார்களை அளிக்க புதிய இணையதளங்களை தேசிய தேர்வு முகமை (NTA) தொடங்கியுள்ளது. NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள NTA, ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆசிரியர் ஒருவர் முஸ்லீம் மதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த சபீர் உசேன், ‘மதத்தால் ஏன் ஒருவர் கொல்லப்பட வேண்டும். தொடர்ந்து மதம் வன்முறைக்கு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கிறேன். இனியும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார். இனி நடுநிலை வகித்து மனிதகுலத்தை மட்டுமே பின்பற்ற போவதாகவும் அவர் சொல்கிறார்.
Sorry, no posts matched your criteria.