India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CBSE 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதிய மாணவர்கள், முடிவு எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர். அந்த முடிவுகள், கடந்த 2023-ம் ஆண்டு மே 10, மே 9-ம் தேதிகளில் வெளியாகின. இதேபோல் கடந்த 2024ம் ஆண்டு மே 15, மே 12-ம் தேதிகளில் வெளியாகின. இதை சுட்டிக்காட்டியுள்ள கல்வி ஆர்வலர்கள், இந்தாண்டும் மே மாதம் மத்தியிலேயே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். SHARE IT.
2026 தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியமைப்பது உறுதி என்று EX அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2026 தேர்தலுக்கு அதிமுக வலுவான கூட்டணி அமைத்துள்ளதாகவும், ஆதலால் தேர்தலில் வெற்றி உறுதி என்றும் குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தால் பாக்.-க்கு சிந்து நதி நீரை தரக்கூடாது எனக் கூறிய மதுரை ஆதீனம், பாக்.-ஐ தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா தான் காரணம் என குற்றஞ்சாட்டிய அவர், வக்ஃபுக்காக போராடுபவர்கள் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் ஒரு மதக்கலவர பூமி என குறிப்பிட்ட ஆதீனம், சீனாவை உலக நாடுகள் ஒதுக்க வேண்டும் என்றார்.
சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ரசிகர்களிடையே ஹாட் டாபிக்காக இது மாறியுள்ளது. KGF படத்தை தயாரித்த ஹொம்பலே நிறுவனம் தான் இப்படத்தையும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு – சுதா காம்போ.. எப்படி இருக்கும்?
CSK கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், 2025 சீசனுடன் தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து சில ரசிகர்களிடம் இருக்கிறது. ஒருவேளை அவர் ஓய்வு பெற்று விடுவாரோ என கேள்வி எழுந்த நிலையில், ஒரு ஹேப்பி நியூசை ரெய்னா கூறியுள்ளார். அடுத்த சீசனில், CSK சிறந்த திட்டமிடலுடன் வருவார்கள். தோனி கண்டிப்பாக இன்னும் ஒரு சீசன் விளையாடுவார் எனத் தெரிவித்துள்ளார். நீங்க சொல்லுங்க.. தோனி அடுத்த சீசனில் விளையாடலாமா?
பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் நட்சத்திரம் சாஜல் மாலிக், ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பிரபலங்களின் அந்தரங்க வீடியோ அடிக்கடி கசிந்து வருகிறது. அந்த வரிசையில், சாஜல் மாலிக்கும் இணைந்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்த பலரும், டிஜிட்டல் உலகில் தற்போது பாதுகாப்பே இல்லை என்று சாடியுள்ளனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், ‘இது இந்து – முஸ்லீம் பிரச்னை கிடையாது, பயங்கரவாதத்திற்கும், மனிதநேயத்திற்கும் இடையே நடக்கும் பிரச்னை’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பிரிவினை எப்போதும் பயத்தையும், அதிக வெறுப்புணர்வையும் மட்டுமே உருவாக்கும் என சுட்டிக்காட்டி, இந்த சமயத்தில் தான் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜன. 1-ம் தேதி 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ ரூ.98,000ஆகவும் விற்கப்பட்டது. பிறகு ஜெட் வேகத்தில் உயர்ந்த விலை, குறையவே இல்லை. சுமார் 2 வாரங்களாக விலை மாறாமல் 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. நேற்று திடீரென 1 கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.112ஆகவும், 1 கிலோ ரூ.1,000 அதிகரித்து ரூ.1.12 லட்சமாகவும் விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது.
அமைச்சர் பதவியை இன்று மாலை (அ) நாளை காலை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மோசடி வழக்கில் அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவெடுக்க நாளை வரை SC கெடு விதித்தது. இதை சுட்டிக்காட்டிய திமுக வட்டாரங்கள், ஜாமீனை தக்க வைக்க பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளார், கோவையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு பிறகு அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறுகின்றன.
வருகிற 30-ம் தேதி பாலக்கோட்டில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ADMK – BJP கூட்டணி உருவாகியுள்ள நிலையில், 2026 தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா தலைமையில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவுடன் உரசல் இருப்பினும், பாஜகவை அண்மையில் தேமுதிக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.