India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநாட்டில் அதிமுகவை விமர்சித்த விஜய்க்கு, இபிஎஸ் பதிலளித்துள்ளார். பாசிச பாஜகவுடன் அடிமைக் கூட்டணி வைத்திருப்பதாக அதிமுகவை விஜய் மறைமுக சாடினார். இந்நிலையில், விஜய் அறியாமையில் பேசுவதாக இபிஎஸ் கவுன்ட்டர் கொடுத்துள்ளார். யாராலும் கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வந்த உடனேயே முதல்வராகவில்லை எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
தோல் பராமரிப்பில் Moisturizer-ன் பங்கு முக்கியமானது. சருமத்தை பாதுகாக்கும் Moisturizer-ஐ பயன்படுத்துவதில், சிலர் சில தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் கவனத்திற்கு: ▶லேசான ஈரப்பதத்தில் Moisturizer-ஐ தடவவும். உலர்ந்த முகத்தில் தடவவேண்டாம். ▶skin type-க்கு ஏற்ப Moisturizer-ஐ தேர்ந்தெடுப்பது அவசியம். ▶தூங்கும் முன் Moisturizer-ஐ பயன்படுத்தவும். ▶இதனை தினமும் பயன்படுத்த வேண்டும். SHARE.
IPL 2025 சீசன், MI அணியை சற்றே சோதித்தது எனலாம். Playoff வரை சென்றாலும், அதற்கான போராட்டம் கடுமையாக இருந்தது. இதற்கு அணியில் ஏற்பட்ட சில மாற்றங்களும் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், 2026 IPL ஏலத்தில் தீபக் சாஹர், ரீஸ் டோப்ளே, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவர்களின் குறைவான பங்களிப்பே காரணமாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
மதுரையில் தவெகவின் 2வது மாநாடு நடந்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள தமிழிசை விஜய்யின் மாநாட்டை விட நாளை அமித்ஷா பங்கேற்கவுள்ள நெல்லை பூத் கமிட்டி மாநாடு தமிழகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். மேலும், அமித்ஷா வெற்றியை நிரூபித்து காண்பித்தவர் எனவும், விஜய் இன்னும் அரசியல் வெற்றியை நிரூபித்து காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு ராஜா தளபதியை தேர்ந்தெடுக்க 10 பேரிடம் விதைகளை கொடுத்தார். அதில் ராஜாவை ஏமாற்ற நினைத்த 9 பேர் வேறு விதையை மரமாக வளர்த்து கொண்டுவந்தனர். ஆனால் அந்த ராஜா விதையோடு வந்த ஒருவனை தான் தளபதியாக தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் அவர் கொடுத்த விதைகள் வேகவைக்கப்பட்டவை, அது வளராது என கூறி கதையை முடித்துக்கொண்ட விஜய், உண்மையான ஒருவரையே தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
நமது சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளின் மேற்பரப்பில் ஒரு தனித்துவமான சிவப்பு புள்ளியை நாம் கண்டிருப்போம். இதை என்னவென்று நீங்கள் யோசித்தது உண்டா? வியாழனில் அமைந்துள்ள இந்த சிவப்பு புள்ளி ஒரு சாதாரண புள்ளி அல்ல. இது 350 நூற்றாண்டுகளுக்கு மேலாக சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சுழல் என்கின்றனர் விஞ்ஞானிகள். இச்சுழல் சுமார் 16,000 கிமீ நீளமும் 12,000 கிமீ அகலமும் கொண்டது. SHARE.
ஜனாதிபதி, கவர்னருக்கு <<17154106>>காலக்கெடு<<>> விதிப்பது தொடர்பான வழக்கு இன்று SC-யில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பாதிக்கப்பட்ட மாநிலம் கோர்ட்டை அணுகினால், கோர்ட் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?’ என CJI கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல், ‘அனைத்து பிரச்னைக்கும் நீதிமன்றமே தீர்வு அல்ல. அரசியல் சாசன அதிகாரிக்கு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை’ என்று பதிலளித்தார்.
திமுகவை உருவாக்கிய அண்ணா, கடனில் வாழ்ந்து தனது கடைசி மூச்சை விட்டார் என கூறிய அருண்ராஜ், திமுகவின் தற்போதைய தலைவர்கள் ஊழலில் வாழ்வதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாநாட்டில் பேசிய அவர், பிளவுவாத அரசியலை செய்யும் திமுக அரசு மக்களை ஏமாற்றி நாடகம் நடத்துகிறது என்றார். மேலும், TN-ல் அடுத்து ED ரெய்டு நடந்தால் பயந்துபோய் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் அமைக்கும் என்றார். உங்கள் கருத்து?
மதுரை மாநாட்டில் பரபரப்பாக பேசிய விஜய், தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாகக் கூறி கூட்டத்தை அதிர வைத்தார். தான் மதுரையில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்த உடனே, தொண்டர்கள் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்தனர். இதனை அடுத்து, மதுரையின் அனைத்து தொகுதிகளையும் கூறி, அனைத்திலும் விஜய் தான் போட்டி என்றார். அனைத்து தொகுதியிலும் விஜய் போட்டியிடுகிறார் எனக் கருதி வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
விஜய்க்கு அனுபவம் இல்லை எனக் கூறும் திமுக அமைச்சர்கள் மக்களை ஓசி என ஏளனம் செய்வதாக CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். நேர்மையானவர்களை அரசியலில் நுழைய விடாமல் திராவிட கட்சிகள் மக்களை சுரண்ட நினைப்பதாக கடுமையாக விளாசிய அவர், திராவிடம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு வரும் தேர்தல் முடிவு கட்டும் என கடுமையாக சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.