India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CM ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் வயிற்று வலி, வாந்தி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியிருந்த நிலையில், இன்று(ஏப்.27) மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
MI vs LSG போட்டியில் ரோஹித் ஷர்மா, ஒரு மாபெரும் சாதனையின் விளிம்பில் இருக்கிறார். இன்று அவர், 5 சிக்ஸர்களை அடித்தால், IPL-ல் 300 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை பெறுவார். இப்போட்டியில் டாஸ் வென்ற LSG கேப்டன் பண்ட், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ரோஹித் ரெக்கார்ட் படைச்சிடுவாரா..?
*பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, A, B, C வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. *இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது. *குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. *ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் குளிர்ச்சியை அதிகரிக்கிறது.
ஹாலிவுட் நடிகர் பிலிப் லோரி (88) காலமானார். வயது மூப்பின் காரணமாக அவர் காலமானார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு டிவி தொடரின் கதாபாத்திரத்தில் நீண்ட காலம் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனை இவரையே சேரும். ஹாலிவுட்டில் மிக பிரபலமான ‘Coronation Street’ சீரியலில் 1960-1968 வரை டெனிஸ் டேனராக நடித்தவர், பிறகு மீண்டும் அதே கதாபாத்திரத்தில் 2011 முதல் இறக்கும் வரை நடித்துள்ளார். #RIP.
மும்பையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில் MI, LSG அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற LSG கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். MI, LSG என இரு அணிகளும் முறையே, 5 & 6-வது இடங்களில் இருப்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், DC, RCB அணிகள் மோதவுள்ளன.
தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர். இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளார். செல்லும் வழி முழுக்க, திறந்த வாகனத்தில் விஜய் தொண்டர்களை சந்தித்தபடியே செல்கிறார்.
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 Group-D பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், 1 பணியிடத்திற்கு 3,329 பேர் மல்லுகட்டுகின்றனர். இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் அவலம் என எதிர்க்கட்சியினரும், அரசு வேலையின் மீதுள்ள மோகம் என ஒரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ மே (அ) ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்குத் தேர்வர்கள் சிறப்பாக தயாராகுங்கள். ALL THE BEST..
கோவையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிகளே அமைச்சராக <<16230061>>செந்தில் பாலாஜி <<>>பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அவர் வசமுள்ள மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை இலாகா முத்துசாமிக்கும் கூடுதலாக அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவை (19) CSK பயிற்சி முகாமுக்கு அழைத்துள்ளது. இவரது செயலைப் பார்த்துவிட்டு, அவருக்கு வாய்ப்பு வழங்க CSK நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மோசமான தோல்வியைச் சந்தித்து வரும் CSK அணியில் தோனிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் யாரும் இல்லை என ரெய்னா கூறியிருந்தார். அதேநேரம், அடுத்த சீசனில் ஒருவேளை தோனி ஆடவில்லையென்றால் என்ற கேள்விக்கு விடை இதுவோ?
கடந்த ஏப்.17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்கி TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதோடு, புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க வருமான உச்ச வரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ₹5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.