news

News April 27, 2025

ரேஷன் பருப்பில் கலப்படமா? ஆய்வு செய்ய உத்தரவு

image

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அண்மையில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கிடங்குகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, பருப்பின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News April 27, 2025

ஆபீசை மூடிட்டு கிளம்பிய சிறுத்தை சிவா!

image

திரைத்துறையில் ஜாதகம், ராசி நட்சத்திரம் போன்ற சென்டிமென்ட் உண்டு. அப்படிதான் ‘கங்குவா’ படத்திற்கு பிறகு இந்த இடம் ராசியில்லை என சிறுத்தை சிவா, தனது ஆபீசை காலி செய்து விட்டாராம். அவர் வீரம் படத்தின் வேலைகளை தொடங்கியதில் இருந்தே அந்த ஆபீசில் தான் இருந்தாராம். இரு படங்கள் வரிசையாக தோல்வி என்றாலும், வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பிளாக் பஸ்டர் படங்களை அந்த ஆபீசில் இருக்கும் போது தானே எடுத்தார்!

News April 27, 2025

சூழும் போர் மேகம்..அமித்ஷா-BSF இயக்குநர் சந்திப்பு

image

இந்தியா-பாக். எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில், எல்லை பாதுகாப்பு படையின்(BSF) இயக்குநர் தல்ஜித் சிங் சௌதரி, உள்துறை அமைச்சகத்துக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக, பாக். எல்லையில் உள்ள விவசாயிகள் பயிர்களை 48 மணி நேரத்திற்குள் அறுவடை செய்ய வேண்டுமென BSF காலக்கெடு விதித்திருந்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சகத்துக்கு BSF இயக்குநரின் வருகை, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News April 27, 2025

இன்றே கடைசி…வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

image

ஐதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்களும் இன்றே சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டுமென ஹைதராபாத் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டுமென அமித்ஷா உத்தரவிட்டார். இந்நிலையில், ஹைதராபாத்தில் சுற்றுலா-மருத்துவ விசாவில் தங்கியுள்ள 213 பேரின் விசாக்கள் ரத்தாகின. இரவுக்குள் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகின்றனர்.

News April 27, 2025

நடிகர் நாகேந்திரன் திடீர் மரணம்.. காரணம் இதுதான்

image

காவல் படத்தை இயக்கியவர், நாகேந்திரன். சில படங்களிலும் இவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். நேற்று நாகேந்திரன் திடீரென மரணம் அடைந்தார். இவரின் மறைவுக்கு மாரடைப்பே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இளம் கலைஞர்கள் மரணமடைவது, தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் தான் பாரதிராஜா மகன் மனோஜ், மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2025

நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்

image

சந்தோஷ் தாஸ் என்பவரின் நுரையீரலில் இருந்து 8 cm நீளமுள்ள கத்தியை ஒடிசா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு பெங்களுருவில் கத்தியால் குத்தப்பட்ட தாஸுக்கு சிகிச்சை முடிந்தபின்பும் வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்காக 8 மாதங்களாக சிகிச்சை பெற்ற நிலையிலும் குணமாகவில்லை. இந்நிலையில், சிடி ஸ்கேனில் கத்தி இருந்தது கண்டறியப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

விமானத்தில் அசிங்கம் செய்த பெண் பயணி

image

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இருந்து சிகாகோ நோக்கி சென்று கொண்டிருந்த சவுத்வெஸ்ட் விமானத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென ஆடைகளை களைந்த பெண் பயணி ஒருவர், தனது சீட்டிலேயே மலம் கழித்துள்ளார். பெண்ணின் செயலைக் கண்ட சக பயணிகளை அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் இவ்வாறு விநோதமாக நடந்துகொள்ள என்ன காரணம் என்று விசாரணை நடைபெறுகிறது.

News April 27, 2025

இனி பான், ஆதாரில் ஒரே நேரத்தில் பெயர் மாற்றலாம்!

image

பான், ஆதார், வாக்காளர் அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்றில் பெயரை மாற்றவே பெரும்பாடு படவேண்டிய சூழல் இனி இல்லை. ஒரே நேரத்தில் அனைத்து அரசு அடையாள அட்டைகளிலும் பெயரை மாற்றிக்கொள்ளலாம். இதற்கான, ஒரு ஒருங்கிணைந்த ஒரு டிஜிட்டல் போர்ட்டலை விரைவில் மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பெயர் மட்டுமின்றி மக்கள் தங்கள் முகவரி, எண் போன்றவற்றை ஒரே இடத்தில் புதுப்பிக்க முடியும். காத்திருப்போம்!

News April 27, 2025

மருத்துவ பொருள்களைப் பெற போராடும் பாகிஸ்தான்!

image

பாகிஸ்தான் மேலும் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது. அந்நாட்டில், ஒரு ‘மருத்துவ அவசரநிலை’ எழுந்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ரத்தானதை அடுத்து, புற்றுநோய், ரேபிஸ் போன்ற சில நோய்களின் மருந்துகளை சேமிக்க அந்நாட்டின் Ministry of Health அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தற்போது அதன் மருந்து தேவைகளில் 30% – 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது.

News April 27, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!