news

News April 27, 2025

86,271 பேருக்கு இலவச பட்டா: அரசாணை வெளியீடு

image

ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் 86,271 பேருக்கு இலவச பட்டா வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் 29,187 பேர், இதர மாவட்டங்களில் 57,084 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி..! உங்க சாய்ஸ் என்ன?

image

வரும் மே 1-ம் தேதி தமிழ் திரை ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் இருக்கு. இரு வேறு கதைக்களத்தை கொண்ட பெரிய படங்கள் வெளிவர உள்ளன. சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஆக்சன் கதைக்களத்தில் ரெட்ரோ-வும், ஃபில் குட் எமோஷனல் டிராமாவாக சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி-யும் வெளிவர இருக்கின்றன. இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இதில் எந்த படம் உங்கள் சாய்ஸ்?

News April 27, 2025

130 அணு ஆயுதங்கள் தயார்.. பாக். அமைச்சர் மிரட்டல்

image

பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால் இந்தியா போருக்குத் தயாராக வேண்டும் என பாக். அமைச்சர் ஹனீஃப் அபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்களிடம் உள்ள 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை மட்டுமே குறிவைத்துள்ளதாகவும், ஆனால் அவை எங்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.

News April 27, 2025

விஜய்யுடன் கைகோர்க்கிறதா பாமக? புது ரூட்டில் ராமதாஸ்

image

தவெக உடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA-ல் பாமக அங்கம் வகிக்கும் நிலையில், ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலில் விஜய் உடன் கைகோர்க்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், NDA-ல் தனது பேர வலிமையை கூட்டுவதற்காக, பாமக கையிலெடுத்த அஸ்திரமே விஜய் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை என்கிறார்கள் விமர்சகர்கள்.

News April 27, 2025

பாக்.க்கு ஆதரவாக குதிக்கிறதா சீனா? Ex ஜெனரல் புது தகவல்

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா
-பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. ஒருவேளை பாக்.க்கு ஆதரவாக சீனா களமிறங்கினால், அது 3-வது உலகப் போரின் தொடக்கமாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்நிலையில், இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், சீனா தலையிடாது என Ex ஜெனரல் ராணா பிரதாப் கலிதா தெரிவித்துள்ளார். USA-வின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதில் கவனம் செலுத்தாது என்றார்.

News April 27, 2025

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணி குடிக்குறீங்களா?

image

பிளாஸ்டிக் நம் வாழ்வின் அன்றாட பகுதியாகிவிட்டது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால், மாரடைப்பு வரும் அபாயம் இருக்கிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போது, அதிலிருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக்கான Bisphenol A, Phthalates ரசாயனங்கள் உடலில் நுழைகின்றன. இதனால், ரத்த அழுத்தம் அதிகரிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படலாம். இனி கொஞ்சம் கவனமாக இருங்க!

News April 27, 2025

மாற்றப்படும் அமைச்சரவை.. வெளியான புதிய தகவல்!

image

தமிழக அமைச்சரவை மாற்றம் உறுதியாகியுள்ளது. உதகையிலிருந்து நாளை சென்னை திரும்புவதாக இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி அவசர பயணமாக சென்னை திரும்பியுள்ளார். இதனிடையே, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 27, 2025

தலைமறைவான பாகிஸ்தான் ராணுவ தளபதி?

image

இந்தியா – பாக்., இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தானின் ராணுவ தளபதி காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. சையத் அசிம் முனிர் இன்னும் பொதுவெளியில் எதுவுமே பேசவில்லை என்பதை சுட்டிக்காட்டி இத்தகவல் பேசப்படுகிறது. அவர் தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு சென்று தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. முக்கியமான நேரத்தில் ராணுவ தளபதி தலைமறைவாகி இருப்பது பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

News April 27, 2025

செந்தில் பாலாஜி திடீர் ட்விஸ்ட்.. CM ஸ்டாலினிடம் வேண்டுகோள்!

image

அமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ள செந்தில் பாலாஜி CM ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனக்குப் பதிலாகத் தனது தீவிர ஆதரவாளரும், அரவக்குறிச்சியில் அண்ணாமலையை தோற்கடித்தவருமான இளங்கோவுக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கக் கோரியுள்ளாராம். இதனால், கரூரில் அமைச்சர் பிரதிநிதித்துவம், இருப்பதோடு கட்சியைப் பலப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

News April 27, 2025

எம்.சாண்ட் விலை ₹1000 குறைகிறது

image

கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் M-சாண்ட், P-சாண்ட் ஆகியவற்றின் விலையை குறைத்து விற்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கல் குவாரி, க்ரஷர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கூட்டம் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது, M-சாண்ட் விலையை மெட்ரிக் டன்னுக்கு ₹1000 குறைத்து விற்க விற்பனையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால், கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படையும்.

error: Content is protected !!