India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டெல்லியில் பெருகிவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், SC பழைய வாகனங்கள் தொடர்பாக புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, “நகர நுழைவாயில்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக நீக்க வேண்டும். BS‑IV & அதற்கும் மேற்பட்ட வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நீண்டகால திட்டம் வகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பால் & பால் பொருள்களில் கலப்படம் நடப்பதை தடுக்க சிறப்பு அமலாக்க பணியை தொடங்க, அனைத்து மாநில அரசுகளுக்கும் FSSAI உத்தரவிட்டுள்ளது. பனீர், கோவா ஆகியவற்றில் நடக்கும் கலப்படம் & தவறான பிராண்டிங் குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பால் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே தென் மாவட்டங்கள், டெல்டாவின் சில பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நாளையும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, காலையில் வாகனங்களில் செல்வோர் ஹெட்லைட்டை ஆன் செய்தவாறே செல்லுங்கள். குளிருக்கு தேவையான ஆடைகளை இப்போதே அணிந்து கொள்ளுங்கள்.

கீபேட் போன் முதல் டச் ஸ்கீரின் மொபைல் வரை ஏராளமான மாடல் போன்கள் வெளிவந்துள்ளன. இதில், சில போன்கள் மட்டுமே உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றன. அதில், இதுவரை அதிகளவில் விற்பனையான மாடல் போன்கள், எவ்வளவு விற்பனையாகியுள்ளன, என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த போன் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

பைக் வாங்க போறீங்களா? பல்வேறு பைக்குகளுக்கு ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் டிசம்பர் மாத தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ₹2.5 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் பைக்குகளுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

நவோதயா பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக EPS சாடியுள்ளார். TN-ல் நவோதயா பள்ளிகள் அமைக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டின் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை SC கடந்த 15-ம் தேதி தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் முறையாக வாதிடாமல் TN அரசு கோட்டை விட்டதாக EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இருமொழி கொள்கையில் பொம்மை முதல்வரின் குட்டு மக்களுக்கு புரிந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டுமென்பது நீண்ட நாள்களாகவே தென்னை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், இத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அத்துடன், அரை லிட்டருக்கான தொகையில் பாதியை மானியமாக வழங்கி, மீதியை விலையாக நிர்ணயிக்கலாம் என்று ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் ஒன்றுக்கு 2 முறை கூறியதில் இருந்தே, <<18565227>>₹2,000<<>> வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், முதியோர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தியது போல, மகளிர் உரிமைத்தொகையும் சில நூறுகள் உயர்த்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 பொங்கல் பண்டிகையை, PM மோடி தமிழகத்தில் கொண்டாடவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜன.9-ல் நிறைவுறும் தனது யாத்திரையில் PM மோடி (அ) அமித்ஷா பங்கேற்பார்கள் என நயினார் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், டிச.23-ல் மத்திய அமைச்சர் <<18586855>>பியூஷ் கோயல்<<>> தமிழகம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். அடுத்தடுத்து பாஜக முக்கிய தலைவர்களின் தமிழக வருகை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

‘அரசன்’ படத்தில் தன்னுடைய கேரக்டர் என்ன, எத்தனை நாள் ஷூட்டிங் என எதுவுமே தனக்கு தெரியாது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்த கேரக்டர் எழுதும்போது உங்க ஞாபகம் வருது சேது, எழுதட்டுமா என வெற்றிமாறன் சார் கேட்டார். உங்க ஞாபகத்தில் வருவதே நல்ல விஷயம், எழுதுங்க சார் என ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு எதுவுமே தெரியவில்லை என்றாலும், அனைத்தையும் வெற்றி சார் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.