India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.
துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னையில் CM ஸ்டாலினை சந்தித்தார். அப்போது திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார். நிகழ்வில் பேசிய சுதர்சன் ரெட்டி, பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் CM ஸ்டாலின் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்துவதாகவும் கல்வி, சுகாதார கட்டமைப்பில் நாட்டை வழிநடத்தும் அளவிற்கு தமிழகம் உயர்ந்திருப்பதாகவும் புகழ்ந்தார்.
திடீர்னு ஒருநாள் சூரியன் வெடிச்சிட்டா என்ன ஆகும்னு யோசிச்சிருக்கீங்களா? அப்படி நடந்தா அது பெரிய அழிவுகளுக்கு வழிவகுக்கும்னு வல்லுநர்கள் சொல்றாங்க ▶சூரியன் வெடிச்சதும் வெளியாகும் neutrino கதிர்வீச்சு உயிரினங்களை அழிச்சிடுமாம் ▶சூரியனோட Gravity இல்லாம, பூமி உள்பட எல்லா கோள்களும் தூக்கி வீசப்படும் ▶பூமியோட temperature -73°C வரை குறைந்து கடல்கள் உறையும்னு வல்லுநர்கள் சொல்றாங்க. SHARE.
CM ஸ்டாலினை ‘அங்கிள்’ என்ற விஜய்க்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூரியனை பார்த்து நாய் குரைக்கும், அதற்காக நாய் மீது சூரியன் கோபப்படுவதில்லை என ஈரோடு கிழக்கு MLA சந்திரகுமார் சர்ச்சையாக பேசியுள்ளார். அதேபோல், அப்பா, அம்மா, மனைவியை பார்த்து கொள்ள முடியாதவர், மக்களை எப்படி பார்த்து கொள்வார் என MLA KP சங்கர், விஜய் குடும்பம் குறித்து பேசியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
CPI மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி வீட்டில், கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு ICU-வில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 100 வயதானவர் என்பதால் நரம்பியல், நுரையீரல், இதய நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் ₹100 கோடி வசூலித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் B,C சென்டர்களில் அதிரிபுதிரியாக ஓடியது. இந்த நிலையில் வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது. ‘ஏஸ்’ தோல்வியில் துவண்டிருந்த விஜய் சேதுபதிக்கு இப்படம் கம்பேக் ஆக அமைந்துள்ளது. ‘தலைவன் தலைவி’ உங்களுக்கு பிடித்ததா ?
வீட்டில் இருக்கும் ஒருவரை புகார் ஒன்றின் பேரில், திடீரென போலீஸ் கைது செய்யும் காட்சிகள் படங்களில் காட்டப்படும். ஆனால், CrPC 41, CrPC 41A பிரிவுகளின் படி, ஒருவரை கைது செய்ய போலீசாரிடம் பிடிவாரண்ட் இருக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல, பிடிவாரண்டுடன் கைது செய்யப்பட்டாலும், CrPC 21 சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட நபர் உடனே ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT.
தெலங்கானாவில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் கொடிரெக்கலா சுதீர்(24) தனது கடிதத்தில், ‘நான் சாகப்போகிறேன். எனது சாவுக்கு 3 பேர் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சுதீர் தவறான உறவில் இருந்ததாக அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் வதந்தி பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. சோகம்
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் 2-வது பாடல் ‘எஞ்சாமி தந்தானே’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கிராமிய குத்து பாடலாக எஞ்சாமி தந்தானேவை உருவாக்கியுள்ளார். சிறுவர்களுடன் தனுஷ் குத்தாட்டம் போடும் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸிற்கு ‘இட்லி கடை’ திட்டமிடப்பட்டுள்ளது.
அஸ்வின், கோலியை தொடர்ந்து மற்றொரு இந்திய டெஸ்ட் ஜாம்பவான் புஜாரா Farewell போட்டி இன்றி ஓய்வை அறிவித்துள்ளார். அணியின் எதிர்காலம் கருதி சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானேவை பிசிசிஐ ஓரங்கட்டியது. இந்த நிலையில் புஜாரா ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், கோலி, ரோஹித், புஜாரா ஆகியோரில் ஒருவருக்கு கூட பிசிசிஐ Farewell போட்டி நடத்தவில்லை. பிசிசிஐ அணுகுமுறை சரியானதா ?
Sorry, no posts matched your criteria.