news

News November 3, 2025

இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து

image

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக அமையும் என்றும், உங்களுடைய அச்சமற்ற ஆட்டத்தாலும், நம்பிக்கையாலும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட செய்திருக்கிறீர்கள் எனவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். நீங்கள் எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டு, இந்த தருணத்தை முழுமையாக கொண்டாடுங்கள் என வாழ்த்தியுள்ளார்.

News November 3, 2025

ஜிம்முக்கு போகணுமா? இதெல்லாம் தேவைப்படும்

image

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நீரேற்றம், சுகாதாரம், உற்சாகம் போன்றவை தேவைப்படும். நீங்கள் ஜிம்முக்கு போக போறீங்களா? உங்களுக்கு சில அத்தியாவசிய பொருட்கள் அவசியம். அவை என்னென்ன பொருட்கள் தேவை என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டிப்ஸை, கமெண்ட்ல சொல்லுங்க.

News November 3, 2025

நவம்பர் 3: வரலாற்றில் இன்று

image

*1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. *1933 – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் பிறந்தநாள். *1957 – லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது. *1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். *2014 – உலக வர்த்தக மையம் ஒன்று திறக்கப்பட்டது.

News November 3, 2025

லெஜெண்ட்ஸ் பட்டியலில் ஹர்மன்பிரீத் கவுர்

image

அதிக வயதில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றுள்ளார். அவருக்கு வயது 36 வருடம் 239 நாட்களாகும். இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இந்திய லெஜெண்ட்களின் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார். கபில் தேவ் (1983 ODI), தோனி (2007 டி20, 2011 ODI), ரோஹித் (2024 டி20) ஆகியோர் தலைமையில் இந்தியா உலகக் கோப்பைகளை வென்று இருக்கிறது.

News November 3, 2025

இந்திய அணியின் வெற்றிப் பாதை

image

52 வருட மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. குரூப் ஸ்டேஜில் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்திற்கு எதிராக வெற்றியும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்திற்கு எதிராக தோல்வியும் கண்ட இந்திய அணி புள்ளி பட்டியலில் 4-வது இடமே பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிப் பாதையை போட்டோக்களாக தந்துள்ளோம். SWIPE செய்து பார்க்கவும்.

News November 3, 2025

ஆனந்த கண்ணீரில் ரோஹித் சர்மா

image

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை ஹிட்மேன் ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்தார். தென்னாப்பிரிக்க அணியின் இறுதி விக்கெட் விழுந்ததும் ரோஹித் சர்மா எழுந்து நின்று கைத்தட்டி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமின்றி, அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார். 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றிருந்தது.

News November 3, 2025

ரத்தன் டாடா பொன்மொழிகள்

image

*சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பது தான். *வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட. *நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். *எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும், சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் சமரசம் செய்துகொள்ள கூடாது.

News November 3, 2025

Chokers இல்ல… நாங்க சாம்பியன்ஸ்

image

என்ன தான் திறமை இருந்தாலும் கோப்பையை வெல்லாத அணியை வசைபாடி கொண்டே தான் இருப்பார்கள். மகளிர் ODI WC வரலாற்றில் 1997, 2000-ல் அரையிறுதி வரை முன்னேறியும், 2005 மற்றும் 2017-ல் இறுதிப்போட்டியில் விளையாடி ரன்னர் அப் ஆக வெறும் கையுடன் திரும்பியதால் இந்திய அணி மீது Chokers டேக் இருந்தது. இன்றைய வெற்றியானது Chokers டேக்கை உடைத்ததோடு மட்டுமின்றி பல விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

News November 3, 2025

அன்று கபில் தேவ்.. இன்று ஹர்மன்பிரீத் கவுர்

image

ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா தற்போது கோலோச்சுவதற்கு 1983 உலகக் கோப்பை வெற்றி முக்கியமானதாகவும். கபில் தேவ் அண்ட் கோ வெற்றி, இந்திய கிரிக்கெட்டுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவ்வெற்றியால் ஊக்கமடைந்து சச்சின், தோனி, கோலி, ரோஹித் போன்ற பல ஜாம்பவான்கள் உருவெடுத்தனர். அதுபோல, மகளிர் WC-ல் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான வெற்றியின் உந்துதலால் எதிர்காலத்தில் பல நட்சத்திர வீராங்கனைகள் உருவாவார்கள்.

News November 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். ▶பொருள்: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

error: Content is protected !!