India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெருநாய்கள் தொடர்பான SC தீர்ப்பு தேசிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு செல்லப்பிராணிகள் வளர்ப்போர், விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேநேரம், நாட்டு நாய்கள் குறித்தான தேடலும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த நாய் வகைகளும், அவற்றின் பிறப்பிடமும் மேலே உள்ள படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வகை நாய் வளர்க்கிறீர்கள்?
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சங்கீதாவின் தந்தை சோர்ணலிங்கம், இங்கிலாந்தில் பிரபல தொழிலதிபராக உள்ளார். தந்தையின் தொழிலால் ஆடம்பரமான பொருளாதார சூழலில் சங்கீதா வளர்ந்திருக்கிறார். ZEE NEWS தகவல்படி, அவரது சொத்து மதிப்பு ₹400+ கோடி என தகவல் வெளியாகியுள்ளது. கணவன் விஜய் சினிமாவில் கொடிகட்டி பறந்தபோதும், சங்கீதா சினிமா வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
CM ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவதுதான், ஆனால் ஒருநாளும் உதயநிதியை முதல்வராக்க முடியாது என அமித்ஷா விமர்சித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவரும் திமுக ஆட்சிதான் எனக் குறிப்பிட்ட அவர், டாஸ்மாக் ஊழல், போக்குவரத்து ஊழல் என குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் தொடங்குகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் நவி மும்பையின் DY படில் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதன்படி 3 லீக், அரையிறுதி & இறுதிப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன. முன்னதாக, RCB வெற்றிப் பேரணியின்போது 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கர்நாடக பேரவையில் கூட்ட கட்டுப்பாடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிய (ஜூலை 15) முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி விவரங்கள் வெளியாகும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக திட்டத்தில் இணைபவர்களுக்கு பணம் வரவு வைப்பது தொடர்பான அறிவிப்பை செப். 15-ல் அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
பூமில இருந்து உணவ விண்வெளிக்கு எடுத்துட்டு போய் அங்க சாப்பிட்டா அந்த உணவோட ஒரிஜினல் சுவையும் வாசனையும் வித்தியாசமா இருக்குன்னு ஆய்வுல தெரியவந்துருக்கு. விண்வெளியில gravity கம்மியா இருக்குறதுனால, மனித உடல்ல இருக்க திரவங்கள் தலையை நோக்கி நகருமாம். இதனால, உடல்ல இருக்க சுவை, வாசனை உணர்வுகள் பாதிக்கப்படுதாம். இதனால உணவோட சுவை மற்றும் வாசனை விண்வெளியில வேற மாதிரி இருக்குறதா ஆய்வுகள் சொல்லுது.
அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது EPS-ன் கருத்து. இந்த மோதல்போக்கு சில காலம் தணிந்திருந்த சூழலில், நெல்லையில் பேசிய அமித்ஷா மீண்டும் குண்டை தூக்கி போட்டுள்ளார். கூட்டணி ஆட்சிதான் அமையும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ODI-யில், அறிமுகமான முதல் 4 போட்டிகளிலும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை, தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி படைத்துள்ளார். முதல் போட்டியிலேயே சதம் அடித்த (150 vs NZ) அவர், அதன்பின் 83 vs பாக்., 57 vs ஆஸி., 88 vs ஆஸி (நேற்று) என 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன், இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து அறிமுகமானவுடன் தொடர்ந்து 4 அரை சதங்கள் (ஆனால் 5 போட்டிகள்) அடித்திருந்தார்.
PM மோடி சோழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் மோடி என்றும், காசி சங்கம விழா தமிழுக்கு பெருமை சேர்க்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், மோடி தமிழ் மண்ணையும் மக்களையும் எப்போதும் மதிப்பவர் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
திமுக Ex பிரபலம் KS ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சித் துண்டை போர்த்தி அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையை சேர்ந்த KS ராதாகிருஷ்ணன், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். 2022-ல் கார்கேவை விமர்சித்ததற்காக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.