India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் LSG அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது MI அணி. முதலில் பேட்டிங் செய்த MI அணியின் ரிக்கல்டன், சூர்யகுமார் அதிரடியாக விளையாடியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த LSG வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்பவர்கள் இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க ★நிகோடின் சாக்லெட்/Chewing gum போன்றவற்றை முயற்சிக்கலாம் ★டென்ஷன் காரணமாக புகைப்பிடிப்பவர் என்றால், அதற்கு பதிலாக யோகா, தியானம், மூச்சு பயிற்சி செய்வதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள் ★ஒரு சிகரெட் பிடித்தால், இன்னொரு சிகரெட் பிடிக்க தோன்றும். அதனால் சிகரெட் பிடிக்கணும் என தோணும்போதே, அந்த ஆசையை கட்டுப்படுத்துங்க.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தங்கம் விலை கடந்த 4 நாள்களாக கிணற்றில் போட்ட கல்லைப் போல் ஏற்ற இறக்கமின்றி அசையாமல் உள்ளது. இதனால், நகை விலை குறையும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை தற்போதைய சரிவுக்கு டிரம்ப் தான் காரணம், அவர் சீக்கிரமே மாற்றிப் பேசுவார். இதனால் தங்கம் விலை கிராமுக்கு ₹10,000-ஐ தாண்டும். எனவே தேவை என்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!
டெல்லியில் இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் RCB, DC அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸில் வெற்றி பெற்ற RCB அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். புள்ளிப்பட்டியலில், முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் DC & RCB அணிகள், முதலிடம் பிடிக்கும் முனைப்போடு களம் இறங்கவுள்ளது. எந்த அணி வெல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தன்னுடைய மகப்பேறு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தான் இன்னும் 3 பிள்ளைகளை கூட பெற்றுக் கொள்ளத் தயார் என்றும் அவர்களுக்கு தாய்ப்பால் புகட்டுவதுதான் சிரமமான காரியம் என்றும் அவர் பேசியுள்ளார். தனது மகன் இஷானுக்கு 3 மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் புகட்டியதாகவும் அதன்பின், மன உளைச்சலால் நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் நாளை (ஏப்.28) முதல் ஜூன் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடக்கிறது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டை Google pay-யுடன் இணைத்து ஈசியாக, UPI பரிவர்த்தனை செய்யலாம். அதற்கு, G-Pay அல்லது ஏதோ ஒரு UPI-யை ஓபன் செய்து, அதில், Bank accounts-க்கு செல்லுங்கள். அதில், Link New Credit Card என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களின் கிரெடிட் கார்டு தகவல்களை பதிவிடவும். பிறகு போனுக்கு வரும் OTP – யை பதிவிட்டு, primary transaction-ஆக தேர்வு செய்தால் போதும். ஆனால், செலவில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்!
தமிழகத்தில் 2 MLA-க்கள் புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் MLA டாக்டர். R. லட்சுமணனுக்கு வனத்துறை ஒதுக்கப்படலாம் என்றும் அரவக்குறிச்சி MLA P.R.இளங்கோவுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.