India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. ஏமாந்த ரசிகர்களை கொஞ்சம் தேற்றுவோம் என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர் தாணு ‘தெறி’ படத்தை வரும் 15-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். ஆனால், இந்த படமும் தற்போது தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூ விலை தங்கத்திற்கு இணையாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 1 கிலோ ₹12,000 வரை விற்பனையானது. இந்நிலையில், இன்று மதுரை, தோவாளையில் 1 கிலோ மல்லிகைப்பூ ₹4,000-₹6,000 வரை விற்பனையாகிறது. ஆனால், இதுவும் பெரிய விலை என மக்கள் புலம்புகின்றனர். 1 கிலோ முல்லை ₹2,500, பிச்சிப்பூ ₹2,000, கனகாம்பரம் ₹2,000, சம்பங்கி ₹150-க்கு விற்பனையாகிறது.

கிரீன்லாந்தை எப்படியாவது <<18833302>>வாங்கிவிடுவேன்<<>> என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார் டிரம்ப். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்த டென்மார்க் MEP ஆண்டர்ஸ் விஸ்டிசன், கிரீன்லாந்து 800 ஆண்டுகளாக டென்மார்க்கின் முக்கிய அங்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற அவர், மேடையிலேயே டிரம்ப்பை “F**k off” என அசிங்கமாகவும் திட்டியுள்ளார்.

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க சத்துணவு ஊழியர்களும் தயாராகி வருகின்றனர். சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி அடையாள போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்தவுடனே ஜன.20-ம் தேதி முதல், வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

சூர்யாவுக்கு சொன்ன ‘இரும்புக்கை மாயாவி’ கதையை அல்லு அர்ஜுனுக்கு சொல்லி லோகேஷ் ஓகே வாங்கியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், அப்படத்தில் அவருக்கு ₹72 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவதால் தான் ‘கைதி 2’ படத்தை அவர் ஓரங்கட்டியதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் EPS விறுவிறுப்பாக நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், தொகுதியில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறாராம். குறிப்பாக, திமுகவின் விமர்சனத்திற்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளாராம்.

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று(ஜன.13) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,170-க்கும், சவரன் ₹400 உயர்ந்து, ₹1,05,360-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் சுமார் ₹4,560 அதிகரித்துள்ளது. <<18842242>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று(ஜன.13) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,170-க்கும், சவரன் ₹400 உயர்ந்து, ₹1,05,360-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் சுமார் ₹4,560 அதிகரித்துள்ளது. <<18842242>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாமகவுக்கு தானே தலைவர் எனக் கூறி வரும் ராமதாஸ், <<18833948>>NDA கூட்டணியிலிருந்து தாங்கள்<<>> இன்னும் விலகவில்லை என நேற்று கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரித்தபோது, அன்புமணிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ராமதாஸை சமாதானம் செய்ய Ex அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருவதே காரணம் எனக் கூறுகின்றனர். தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்த அவர், பாமக ஒன்றிணைப்பு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு உள்ளிட்டவைகள் குறித்து பேசினாராம்.
Sorry, no posts matched your criteria.