news

News July 30, 2024

கேரளாவுக்கு கருணை காட்டுமா மத்திய அரசு?

image

கேரளாவில் நேரிட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. மேலும், நிலச்சரிவு நிகழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் மீட்பு மற்றும் சீரமைப்புப்பணிகளுக்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதியுதவியை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

News July 30, 2024

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைய வாய்ப்பு

image

2028 அமெரிக்க ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். பாரிஸில் ‘ஒலிம்பிக் கிரிக்கெட்’ தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், “ஆண்கள், பெண்கள் இருவருக்குமான கிரிக்கெட்டும் 2028 அமெரிக்க ஒலிம்பிக்கில் இடம்பெற வாய்ப்புள்ளது” என்றார். இதுவரை ஒலிம்பிக்கில் ஒரே ஒருமுறை மட்டும் <<13734877>>கிரிக்கெட் <<>>நடந்துள்ளது.

News July 30, 2024

தனிநபர் கடன் வழங்கும் டாப் 5 வங்கிகள்

image

குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் டாப் 5 வங்கிகளை அறிந்து கொள்வோம். ஐசிஐசிஐ வங்கி 10.65%, HDFC வங்கி 10.75%, கோடக் மஹேந்திரா வங்கி 10.99%, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 11.15%, பஞ்சாப் நேஷனல் வங்கி 12.75% வட்டியில் தனிநபர் கடன் வழங்குகின்றன. இந்த விகிதம், நீங்கள் பணிபுரியும் நிறுவனம், சம்பளம் மற்றும் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மாறுபடலாம். கூடுதல் விவரங்களுக்கு வங்கிக்கிளையை அணுகவும்.

News July 30, 2024

பள்ளி PT வாத்தியார் கைது

image

வடலூரில் ஈட்டி தாக்கி மாணவன் மூளைச்சாவு அடைந்த விவகாரத்தில், பள்ளியின் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு மைதானத்தில் சிலம்பம் பயிற்சி செய்து கொண்டிருந்த மாணவன் கிஷோரின் தலையில் வேறு ஒரு மாணவர் வீசிய ஈட்டி தாக்கியது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிஷோர், நேற்று மூளைச்சாவு அடைந்தார். இந்த விவகாரத்தில் பிடி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

News July 30, 2024

பதக்கம் வென்ற விவசாயி மகன்

image

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் சரப்ஜோத் சிங், விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஹரியானாவைச் சேர்ந்த இவர், 13 வயதில் கால்பந்து வீரராக விரும்பினார். பின்னாளில் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் அதிகரித்ததால், அதில் கவனம் செலுத்தினார். ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் பெற்றோரின் அனுமதியுடன் 2019 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு தங்கம் வென்றார்.

News July 30, 2024

அதிமுக போராட்டத்திற்கு அனுமதி

image

சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக உண்ணாவிரதம் அறிவித்துள்ள அதிமுக, போராட்டத்திற்கு அனுமதி கோரியிருந்தது. இதற்கு, மனுதாரர் கோரும் இடத்தில் அனுமதி அளிக்கப்படுவதில்லை என பதிலளித்த காவல்துறை, மாற்று இடத்தில் போராட்டம் நடத்தலாம் என தெரிவித்தது.

News July 30, 2024

காங்.பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இல்லை:FM

image

ஒரு மாநிலத்தின் பெயர் பட்ஜெட்டில் இல்லை என்றால், அந்த மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக அர்த்தம் இல்லையென நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் தாக்கல் செய்த 2004-2005 மத்திய பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம் பெறவில்லை என அவர் பதிலளித்தார்.

News July 30, 2024

நடிகர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி

image

பிரபல நடிகரும் கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதாகும் அவர், 1979ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை 120 படங்களில் நடித்திருக்கும் அவர், கடைசியாக ‘தாதா’ படத்தில் நடித்தார். அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் மகள் சுஹாசினி, தனது தந்தை நலம்பெற்று வருவதாக கூறியுள்ளார்.

News July 30, 2024

இதுவரை இல்லாத பேரழிவு: பினராயி விஜயன்

image

கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு நிகழ்ந்துள்ளதாக, முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியானதாக வேதனை தெரிவித்த அவர், மீட்புப் பணிகள் துரிதமாக நடக்கிறது என்றார். மேலும், 48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை பெய்ததாக குறிப்பிட்ட அவர், நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை கண்டறிய மோப்ப நாய் அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறினார்.

News July 30, 2024

விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக்கோரி வழக்கு

image

உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வழங்கக்கோரி உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், இலங்கை, மலேசியா, பிரான்சில் தமிழில் அறிவிப்பு வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் தமிழில் அறிவிப்பு இல்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க விமான போக்குவரத்து துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!