India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளதால் இன்றைய போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.
டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை, தமிழக அரசு நாளை வரை நீட்டித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், தற்போது மேலும் ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, தலைமை ஆசிரியரை அணுகவும்.
வயநாடு பகுதியில் ஏற்பட்ட பேரிடர் தமிழர்களின் மனங்களை உலுக்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும், கேரள மக்களின் வேண்டுகோளை ஏற்று, தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமெனவும், கேரள சகோதரர்களுக்கு திமுக அரசு துணை நிற்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, திருவள்ளூர், காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளர் மேத்யூ மோட் (Matthew Mott), அப்பதவியில் இருந்து விலகியதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான அவர், 2022 முதல் நான்கு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், 2024 டி20 உலகக்கோப்பை தோல்வி காரணமாக, அவர் இடையிலேயே விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
பேடிஎம் நிறுவனம் இந்தியாவின் முதல் NFC கார்டு சவுண்ட் பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. UPI பரிவர்த்தனைக்கு ஏதுவாக வணிகர்கள் சவுண்ட் பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், UPI பரிவர்த்தனை மட்டுமின்றி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்யும் வகையிலான ஒருங்கிணைந்த சவுண்ட் பாக்ஸை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்து 10 நாள்கள் பயன்படுத்த முடியும்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 44ஆவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் உபரிநீர் முழுமையாக 16 கண் மதகுகள் வழியாகவும், கிழக்கு, மேற்கு கரை கால்வாய்கள் மூலமாகவும் வெளியேற்றப்படுவதால், சுமார் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறும். மேட்டூர் அணை வரலாற்றில் கால்வாய் பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்பது, இது 13ஆவது முறையாகும்.
இந்தியா இலங்கை இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் மைதானத்தில் மூடப்பட்டிருந்த தார்பாய்கள் அகற்றப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் டாஸ் போடப்படும் எனத் தெரிகிறது. மழையின் தாக்கம் பெரிதாக இல்லாததால், போட்டிக்கான ஓவரில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
RCB அணியின் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக விளையாடலாம் என தெரிகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் சரியாக விளையாடாத காரணத்தால், RCB அணி அவரை
தக்கவைத்துக்கொள்ள விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அடுத்த சீசனில் அவரை ஏலத்தில் எடுக்க CSK, DC, PBKS அணிகள் ஆர்வம் காட்டுவதாகவும், அதில் CSK அணிக்கு அவர் வரலாம் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
2014 -2023 வரை மோடி தலைமையிலான மத்திய அரசு சுமார் 12.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நலன் குறித்து முதலை கண்ணீர் வடிக்கும் காங்., தனது ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என விமர்சித்த அவர், மோடி அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், வேலையின்மை அளவு 2022-23ஆம் ஆண்டில் 3.2% குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.