India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இங்கிலாந்தை போல வரி செலுத்தினாலும், சோமாலியாவை போலதான் மக்களுக்கு சேவைகள் கிடைப்பதாக ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி, ஜிஎஸ்டி மூலம் பொதுமக்களின் வருமானத்தில் 70 முதல் 80 சதவீதத்தை அரசாங்கம் எடுத்துக்கொண்டதாக தெரிவித்த அவர், இது தொடர்ந்தால் வரும் தேர்தலில் 120 இடங்களை கூட பாஜக பெறாது என விமர்சித்துள்ளார்.
துருக்கியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ரஷ்யாவின் மிக அழகான பைக்கர் என வர்ணிக்கப்படும் தத்யானா ஒசோலினா (38) உயிரிழந்தார். நெடுஞ்சாலையில் BMW இரு சக்கர வாகனத்தில் சென்றபோது டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பலியானர். சாகசப் பயணங்கள் மேற்கொண்டு பிரபலமான ஒசோலினாவுக்கு, டிக்டாக்கில் 50 லட்சம், யூடியூபில் 20 லட்சம், இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.
பாண்டியா மற்ற வீரர்களின் மரியாதையை சம்பாதிக்காதது தான் டி20 கேப்டன் மாற்றத்திற்கு வழி வகுத்ததாக இலங்கையின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்ட் தெரிவித்துள்ளார். ஒரு கேப்டனாக இருக்கும் நபர் அனைவரையும் ஒருங்கிணைத்து சரியான வழியில் அணியை வழிநடத்த வேண்டும் என்ற அவர், அதற்கு பாண்டியாவை விட சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவராக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் தீயணைப்புத்துறை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பேரிடர் தணிப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, ₹810 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட நகரங்களின் வெள்ள மேலாண்மைக்கு ₹2,514 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான ஜொலிக்கும் சருமத்தை பெற இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெல்லத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்டுகளும், பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகளும் நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்க பப்பாளி சாப்பிடலாம். நெல்லிக்காய், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு பழங்களும் தோல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என பரிந்துரைக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உ.பியை சேர்ந்த பாஜக எம்பி அருண் குமார் சாகர் வலியுறுத்தியுள்ளார். தலித்துகள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடன் வாழ கன்ஷி ராம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் மகாராஷ்டிரா அணி கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அந்த அணியின் கேப்டனாக கேதர் ஜாதவ் இருந்தார். மகாராஷ்டிரா அணியின் முக்கிய வீரரான ருதுராஜ் கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் அந்த அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனையடுத்து இந்த முறை அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை (ஜூலை 26ஆம் தேதி) ஒவ்வொரு இந்தியருக்கும் மிக முக்கியமான நாள் என்று பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘கார்கில் விஜய் திவாஸ்’ (கார்கில் வெற்றி தினம்) தினமான அன்று, நமது நாட்டைக் காத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தானும் கார்கில் போர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் அகீம் ஜோர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்டில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெர்மையா லூயிசுக்கு பதிலாக அகீம் ஜோர்டன் அணியில் இடம்பிடித்துள்ளார். அகீம் ஜோர்டன் 19 முதல் தர போட்டிகளில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் நாளை ( ஜூலை 26) வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வு முடிவை அறிந்துக் கொள்ளலாம். மேலும், 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதியும் வெளியாகிறது.
Sorry, no posts matched your criteria.