India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியில் உள்ள ஜல்சக்தி அமைச்சகத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் சற்றுமுன் சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை, ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீர் திறப்பு மற்றும் முல்லை பெரியாறு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
GST வரி முறையை எளிதாக்கும் வகையில், வருங்காலத்தில் அதன் கட்டண அடுக்குகளை (ஸ்லாப்) 4லிருந்து 3ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய CBIC தலைவர் சஞ்சய் அகர்வால், GSTஇல் உள்ள பல விகிதங்களும் வகைப்பாடுகளும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால் அரசு அதனை மாற்றியமைக்க உள்ளதாகக் கூறினார். தற்போது 5%, 12%, 18% & 28% என்ற 4 வகை விகிதங்கள் GST வரி விதிப்பில் நடைமுறையில் உள்ளன.
தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியவில்லை. இதனால், விரல் ரேகை மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக, கருவிழி பதிவு மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஷர்மாவுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் 40 வயது பூர்த்தியடைவதால் உடல் தகுதி அடிப்படையில் இடம்பெறுவது கடினம் என அவர் கணித்துள்ளார். அதே சமயம், நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் விராட் கோலிக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்திற்கு ‘மாம்போ’ என பெயரிடப்பட்டுள்ளது. சிறுவனுக்கும், சிங்க குட்டிக்கும் இடையிலான நட்பை கூறும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக நிஜ சிங்கத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காஜா மைதீன், அப்துல் கனி படத்தை தயாரிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியினை பெற வேண்டுமென்றால் முதல்வர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வது அவசியம் என்ற அவர், கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான செயல் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தையில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ்கார்ட்னில் வில்வித்தை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில், தொடக்கத்தில் இந்திய அணி வீராங்கனைகள் தடுமாறினர். இருப்பினும், கடைசியில் சிறப்பாக விளையாடிய தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி 1,983 புள்ளிகளுடன் 4ஆம் இடம் பிடித்துள்ளது.
சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்தால்தான் தென் மாவட்டங்களில் வெற்றி பெற முடியும் என சீனியர்கள் சிலர் ஈபிஎஸுக்கு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது. இதற்கு உடன்படாத அவர், தென் மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை செய்து சீனியர்களின் அதிகாரத்தை குறைக்க முடிவெடுத்துள்ளராம். இதனால், செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் இபிஎஸுக்கு அதீத விசுவாசம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியிருக்கும் ஜாபர் சாதிக்கின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து இயக்குநர் அமீரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்ததாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அமீர், இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து என்னையும் கைது செய்ய வேண்டும் என விரும்புவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.