news

News July 26, 2024

அமைச்சர் பொன்முடியின் சொத்துகள் முடக்கம்

image

திமுக அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மணல் குவாரியில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அவர் மீது ED வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணிக்கு சொந்தமான ₹14.21 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

News July 26, 2024

‘KGF 3’ படத்தில் நடிக்கும் அஜித்? விளக்கம்

image

KGF இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் வதந்தி என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். இருவரும் நேரில் சந்தித்தது உண்மை என்றும், ஆனால், படத்தில் நடிப்பது குறித்து எதுவும் ஆலோசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘KGF 3’ படத்தில் யஷ் உடன் இணைந்து அஜித்குமார் நடிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

News July 26, 2024

ஆடி வெள்ளி விரதத்தின் நன்மைகள்

image

ஆடி வெள்ளியில் விரதம் இருப்பது சுபப் பலன்களை அள்ளி வழங்கும். காலை முதல் விரதம் இருந்துவிட்டு மாலையில் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டில் உள்ள மகாலட்சுமி அல்லது அம்பிகையின் படத்திற்கு முன்பு நெய் விளக்கேற்றி, பூஜைக்கு தேவையான படையல் பொருள்களை வைத்து வழிபடலாம். இவ்வாறு செய்வதால் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர்.

News July 26, 2024

எதிரிகளின் பெயர்களை டாட்டூ போட்டுக் கொண்டவர் கொலை

image

எதிரிகளின் பெயர்களை டாட்டூ போட்டுக் கொண்ட நபர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரு வக்மேர் (48) கடந்த 24ஆம் தேதி மும்பையில் உள்ள ஸ்பாவில் வைத்து கொல்லப்பட்டார். RTI ஆர்வலர் என தன்னைக் கூறிக்கொண்டு, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஸ்பா உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொலையை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News July 26, 2024

எருமையில் சவாரி செய்தேன்: மாளவிகா

image

தங்கலான் படத்தின் ஒரு காட்சிக்காக எருமை மாட்டில் சவாரி செய்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இயக்குநர் காமெடியாக சொன்னதாக முதலில் நினைத்ததாகவும், அப்போது தான் அதற்கு தயாராகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனக்கு மேக்கப் போடுவதற்கு மட்டும் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். படத்தில் பழங்குடியினத்தவரின் கடவுளாக மாளவிகா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 26, 2024

5 நிமிடத்தில் PAN கார்டு எடுக்கலாம்!

image

*<>ITR<<>> இணையதளத்தில் ‘Instant e-PAN’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். *அடுத்து ‘Get New e-PAN’ என்பதை கிளிக் செய்து, ஆதார் எண்ணை டைப் செய்து, ‘Continue’ கொடுக்கவும். *விதிகளை படித்த பிறகு, டிக் பாக்ஸை கிளிக் செய்து ‘Continue’ கொடுக்கவும். *ஆதார் உடன் பதியப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த OTP-யை பதிவிடவும். *விவரங்களை சரிபார்த்து ‘Continue’ கொடுங்கள். *தற்போது உங்களது e-PAN கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

News July 26, 2024

காவிரியில் வெள்ளம்: 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

image

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, தஞ்சை உள்பட 9 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது, விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

News July 26, 2024

செட் அமைக்க ₹30 கோடி செலவு செய்த படக்குழு

image

‘ராயன்’ படத்தில் வரும் ராயபுரம் பகுதியை அப்படியே செட் அமைக்க ₹30 கோடி செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, சமீபத்திய பேட்டி ஒன்றில் இத்தகவலை பகிர்ந்துள்ளார். படத்தின் கலை இயக்குநர் ஜாக்கி, வட சென்னை பகுதியை தத்ரூபமாக கொண்டு வர மிகவும் மெனக்கெட்டதாகவும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

News July 26, 2024

சமீபத்தில் உயர்த்தப்பட்ட FD வட்டி வகிதம்

image

சில வங்கிகள் வைப்புத்தொகைக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. அதன்படி, HDFC வங்கி 4 ஆண்டுகள் 7 மாதங்கள் – 55 மாதங்களுக்கு 7.40%, ICICI வங்கி 15 மாதங்கள் – 18 மாதங்களுக்கு 7.20%, SBI வங்கி 444 நாள்களுக்கு 7.25%, PNB வங்கி 400 நாள்களுக்கு 7.25%, Axis வங்கி 17-18 மாதங்களுக்கு 7.20% வட்டி வழங்குகின்றன. இந்த திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் வட்டி கிடைக்கும்.

News July 26, 2024

கேன்சர் பாதிப்புகள் அதிகரிப்பு: அமைச்சர் ஜெபி நட்டா

image

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 15.5 லட்சம் பேர் கேன்சரால் பாதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெபி நட்டா தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் 2.5% என்ற அளவில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஆண்கள் வாய், நுரையீரல் புற்றுநோயாலும், பெண்கள் மார்பக புற்றுநோயாலும் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேன்சர் மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும்படி விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!