India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்தார். இதில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டிகள் ஆக.11 வரை நடைபெறுகிறது.
இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டுமென மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கு நிலுவை வரி இல்லை அல்லது நிலுவையில் உள்ள வரியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அந்த சான்றிதழ் உறுதிப்படுத்தும். இது தொடர்பான சட்டத் திருத்தம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
*மேஷம் – ஆதாயம் கிடைக்கும்
*ரிஷபம் – ஆதரவு அதிகரிக்கும்
*மிதுனம் – தோல்வி உண்டாகும்
*கடகம் – போட்டியை தவிர்க்கவும்
*சிம்மம் – லாபகரமான நாள்
*கன்னி – பெருமை சேரும்
*துலாம் – பயம் தவிர்க்கவும்
*விருச்சிகம் – நற்சொல் தேடிவரும்
*தனுசு – மகிழ்ச்சியான நாள்
*மகரம் – கீர்த்தி உண்டாகும் *கும்பம் – சோதனையான நாள் *மீனம் – மன நிறைவான நாள்
பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்க மாட்டார் என புதுச்சேரி முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் பாஜக-N.R.காங்., கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்லவில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இன்று நடந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் PAK அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய SL அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. ஞாயிற்று கிழமை இரவு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், ஒலிம்பிக்கில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் இந்தியாவின் பெருமை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீரர்கள் அனைவரும் பிரகாசிக்கவும், உண்மையான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தவும், தனித்துவமான செயல்திறன்களால் நம்மை ஊக்குவிக்கவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
33ஆவது ஒலிம்பிக் திருவிழா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதை, வீரர்கள் தங்களது வாழ்நாள் லட்சியமாக கருதுகின்றனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட இந்தியாவிலிருந்து 117 வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
‘தி கோட்’ படத்தின் இசையமைப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யுவன் மேஜிக் தொடங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், வெங்கட் பிரபு இத்தகவலை பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், 3ஆவது பாடல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில இயற்கையான செயல்முறைகளின் மூலம் முகத்தில் வழியும் எண்ணெய் சுரப்பை தவிர்க்கலாம். வெள்ளரிக்காயை தோல் சீவி முகம் முழுவதும் தடவி, மறுநாள் காலை வெந்நீரில் கழுவலாம். தக்காளியை நறுக்கி முகத்தில் தடவி 15-30 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தேய்த்து, காய்ந்த பின் கழுவலாம். இதை வாரத்திற்கு இரு முறை செய்யலாம் என சருமநல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.