India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடி தலைமையில் 9வது நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசைக்கப்பட உள்ளது.
➤உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப்பெரிய பாவம். ➤நீ பட்ட துன்பத்தை விட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. ➤உன் மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. ➤பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது. ➤உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. ➤அன்புடன் பழகுபவர்களே உலகத்திற்குத் தேவை. ➤பொறாமை அடிமைகளின் குணம்.
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், இலங்கைக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியில் ஏற்கெனவே 2 வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவும் விலகியதாக தெரிகிறது. அவருக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
இன்று இந்திய சினிமாவில் ஒரு அடையாளமாக இருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பாளராக அறிமுகமான நாள் இன்று. 1992ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா ஜூலை 27ல் நடந்தது. அந்த விழாவில்தான் ரஹ்மான் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ரஹ்மான் இசையமைத்த படங்களில் ரோஜா முதல் ராயன் வரையில், உங்களுக்குப் பிடித்த படம் எது என கமென்ட் செய்யுங்க.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர இன்று (ஜூலை 27) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் இணையத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்றும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <
* 1876 – கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று
* 1955 – மலேசியாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக வீ. தி. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1990 – பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
* 2015 – இந்திய பஞ்சாப் பகுதியில் குருதாஸ்பூர் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
* 2015 – முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் இறந்த தினம்
அவதூறு வழக்கில் நேற்று உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் காங்., எம்பி ராகுல் காந்தி ஆஜரானார். அங்கிருந்து திரும்பும் வழியில், செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் கடைக்கு திடீரென விசிட் கொடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தனது தொழில், குடும்பம் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி தனது தொழிலுக்கு உதவுவதாக உறுதியளித்ததாக அந்த தொழிலாளி கூறியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டை இன்று முதல் தொடங்கவுள்ளது. இன்று மதியம் 12.30 மணி முதல் நள்ளிரவு 12.02 மணி வரை படகு ஓட்டுதல், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளின் நேரலையை ஜியோ சினிமா ஆப், ஸ்போர்ட்ஸ் 18, வயாகாம் 18 ஆகியவற்றில் பார்க்கலாம்.
நடிகை கீர்த்தி சுரேஷ் 20 வயது இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வைரலானது. ரகு தாத்தா புரொமோஷன் விழாவில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தளபதி விஜய் சொன்னது போல வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என்பதால் அதை புறக்கணிப்போம்” என்றார். மேலும், தனது நடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க எப்போதும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 428 ▶குறள்: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். ▶பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
Sorry, no posts matched your criteria.