India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய” ஆதிசங்கரர் அருளிய இந்த சிவ பஞ்சாட்சர ரோகிணி நட்சத்திர ஸ்லோகத்தை திருநாள், சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் , உடல் & மன சுத்தியுடன் 4 முறை பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும் என்பது ஐதீகம்.
“கிரேட் பி” நிலையில் 94 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை RBI வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <
காலையில் வெறும் வயிற்றில் காய்கறியில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காய்கறிகளில் தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்றும், இது செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கின்றனர். செரிமான பிரச்னை இருந்தால் காலையில் எழுந்தவுடன் பாகற்காய், வெள்ளரி அல்லது கேரட் ஜூஸ் பருகலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்.
மூத்த அரசியல் தலைவரும், நீலகிரி தொகுதி முன்னாள் பாஜக எம்.பியுமான மாஸ்டர் மதன் (92) வயது மூப்பு காரணமாக காலமானார். இவர், 1998-1999 & 1999-2004 வரை 2 முறை மக்களவை எம்.பியாக பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். படுகர் இனத்தை சேர்ந்த இவர், அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கினார். இந்நிலையில், அவரது மறைவுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க வேண்டுமென்ற ஆசை தனக்கு உள்ளதாக இயக்குநர் சிம்புத்தேவன் கூறினார். படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்ததாகக் குறிப்பிட்ட அவர், பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணங்களால் நிலையில் படம் நின்றது என்றார். நடிகர் வடிவேல் நடிப்பில் 2006இல் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் பெரிய வெற்றியை பெற்றது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். SSC சார்பில் நடத்தப்படும் CGL-2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். முதல்நிலை கணினி வழி தேர்வு: செப்டம்பர், அக்டோபரிலும், 2ஆம் நிலை கணினி வழி தேர்வு: டிசம்பரிலும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, தமிழக காங்., சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆக.1ம் தேதி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மறியல் போராட்டம் அறிவித்துள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுக்காததே, தனித்தனியாக போராடுவதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆடி வெள்ளி மட்டுமில்லை, ஆடி சனிக்கிழமைக்கும் பல சிறப்புகள் இருப்பதாக ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும், சனிக்கிழமை சனி பகவானின் வழிபாடும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள், ஆடி சனியன்று சிவனை வழிபட்டால் சனி தோஷம் குறையும் என்று கூறப்படுகிறது. சிவன், சனி பகவான் ஆசீர்வாதம் பெற ஆடி சனி சிறந்த நாளாக சொல்லப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.15 லட்சம் கன அடியாகவும், வினாடிக்கு 1,50,000 ஆக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. கோலி, ரோஹித், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், சூர்யகுமார் தலைமையிலான இளம் அணி இன்று களமிறங்குகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Sorry, no posts matched your criteria.