news

News July 30, 2024

இன்றும், நாளையும் துக்கம் அனுசரிப்பு

image

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

News July 30, 2024

தமிழக அரசின் உதவி எண் அறிவிப்பு

image

கேரளாவில் பெய்துவரும் கனமழையால், வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், வயநாடு பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு சார்பில் இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர், 1070 என்ற எண்ணில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 30, 2024

வயநாடு நிலச்சரிவில் 84 பேர் பலி

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் உட்பட 84 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 600க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனதென்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

News July 30, 2024

கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ₹5 கோடி நிதி

image

வயநாடு பகுதியில் நேரிட்ட பயங்கர நிலச்சரிவு பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இதன்பின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணத்தை அறிவித்த ஸ்டாலின், மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்கு துணையாக பணியாற்றிட, 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுவையும் உடனே அனுப்ப உத்தரவிட்டார்.

News July 30, 2024

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய்களில் நீர் திறப்பு

image

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்துக்காக இன்று முதல் டிச.13ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று, 137 நாள்களுக்கு கால்வாய்களில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்கள் மூலம் மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

₹8,500 கோடி மினிமம் பேலன்ஸ் அபராதம் வசூல்

image

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் அபராதமாக ₹8,500 கோடி வசூலித்துள்ளன. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ₹2,331 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக PNB வங்கி ₹1,538 கோடி, இந்தியன் வங்கி ₹1,466 கோடி, பேங்க் ஆஃப் பரோடா ₹1,250 கோடி, பேங்க் ஆஃப் இந்தியா ₹827 கோடி, எஸ்பிஐ ₹640 கோடி வசூல் செய்துள்ளன. 2020ஆம் ஆண்டு மினிமம் பேலன்ஸ் அபராதத்தை எஸ்பிஐ நிறுத்தியது.

News July 30, 2024

ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் இடுப்பளவு

image

இடுப்பின் சுற்றளவை நோய் அபாயத்தின் குறிகாட்டியாக கருதலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியத்தை அளவிட, உடலின் மொத்த எடையை கணக்கிடுவதை விட, இடுப்பில் படிந்துள்ள கொழுப்பை அளவிடுவதன் மூலம் எளிதில் உணர முடியும் என்கிறார்கள். ஆண்களின் இடுப்பளவு 37 இன்ச்-க்கு மேல் இருந்தாலும், பெண்களின் இடுப்பளவு 31.5 இன்ச்-க்கு மேல் இருந்தாலும் நோய் அபாயத்திற்கான காரணி அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர்.

News July 30, 2024

நிலச்சரிவு குறித்து விசாரிக்க பசுமை தீர்ப்பாயம் முடிவு

image

வயநாடு நிலச்சரிவு குறித்து விசாரிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. நிலச்சரிவு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து, விரைவில் பட்டியலிட பதிவாளருக்கு, பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களை கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நிலச்சரிவு பகுதிகளில் உள்ள சுரங்கம், சாலைகள், குவாரிகள் குறித்த விவரங்களைத் தயாரிக்க கேரள அரசுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

News July 30, 2024

₹158 கோடியை வசூலிக்க முயற்சி

image

பைஜூஸ் நிறுவனத்திடமிருந்து ₹158 கோடியை வசூலிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. விளம்பரங்களுக்காக 2019ஆம் ஆண்டு பைஜூஸ் பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. சமீபத்தில் நிதி நெருக்கடியில் சிக்கிய பைஜூஸ், ₹158 கோடியை செலுத்தத் தவறியதாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், பிசிசிஐ முறையிட்டது. இன்றைய விசாரணையின்போது பைஜூஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாக பிசிசிஐ தெரிவித்தது.

News July 30, 2024

ஆதார் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?

image

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை எத்தனை முறை மாற்றம் செய்யலாம் என்ற விவரம்.
*பெயர் – அதிகபட்சம் 2 முறை மாற்றலாம்.
*பாலினம் மற்றும் பிறந்த தேதி – வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.
*முகவரி – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
*முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் – பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற 8 ஆவணங்கள்.

error: Content is protected !!