India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாரத்திற்கு ஒரு முறை கணவாய் மீன் சாப்பிடுவதால் தோள்பட்டை வலி, முடி உதிர்வது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலுள்ள வைட்டமின் B3 ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. கணவாய் மீனை தொடர்ந்து சாப்பிட்டுவர, ரத்தத்தில் உள்ள சிகப்பணு, வெள்ளையணு அதிகரிக்கும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.
கென்யாவில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த பெண்ணை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஷாம்பு மற்றும் லோஷன் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகத்தின் பேரில் ஷாம்பு பாட்டில்களை ஆய்வு செய்ததில், 2 KG எடையுள்ள கொகைன் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ₹20 கோடி என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கனு பாருங்க…
பயனாளர்களை தக்கவைக்க சமூக வலைதள செயலி நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் AI வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் நீங்கள் எளிமையாக AI போட்டோக்களை உருவாக்க முடியும். உதாரணமாக, AIக்கான Blue Circleஐ கிளிக் செய்து, imagine elephant என டைப் செய்தால் 2 நொடிகளில் அந்த போட்டோ வந்துவிடும். Just Try it.
மின்சார விபத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு, CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு இரங்கல் கூறிய CM, ₹3 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோவில்மட்டம் என்ற இடத்தில், அரசுப் பேருந்தின் மீது உயர் மின்னழுத்த கம்பி உரசிய விபத்தில் மின்சாரம் தாக்கி, ஓட்டுநர் பிரதாப் (42) உயிரிழந்தார்.
ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், அனைத்து ரேஷன் கடைகளிலும் தட்டுப்பாடு இன்றி பாமாயில் தரப்படுகிறது என்றார். மேலும், ரேஷன் கடைகளுக்கு ஒரே கிழமையில் வார விடுமுறை அளிப்பது பற்றி பேசி முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய விவகாரத்தில், செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்பதில் சிக்கல் இருப்பதாக, மத்திய அமைச்சர் <<13798788>>ஷோபா<<>> கரந்தலஜே தெரிவித்துள்ளார். சர்ச்சை பேச்சு தொடர்பாக ஏற்கெனவே X தளத்தில் மன்னிப்பு கோரியதாக, அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் காரணம் என அவர் பேசியிருந்தது சர்ச்சையானது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று, இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையங்களைப் போலவே, மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், மருத்துவமனைகளை பாதுகாப்பான மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருகே 5 பேர் சென்ற பைக் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சென்ற பைக், சாத்தமங்கலம் அருகே சாலைத் தடுப்பில் மோதியது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், மோகனாஸ்ரீ (4), ராஜசேகர், பானுமதி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டூவீலரில் ஹெல்மெட் அணிந்து 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘G.O.A.T’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ள நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யின் தோற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். யாரெல்லாம் ட்ரெய்லருக்கு வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.