India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பான் கார்டு எந்தெந்த சேவைக்கு கட்டாயம் எனப் பார்க்கலாம். 1) வங்கிக் கணக்கு தொடங்கக் கட்டாயம் 2) பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பயன்படும் டிமேட் கணக்கை துவங்க அவசியம் 3) வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய கட்டாயம் 4) கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்க பான் கார்டு கட்டாயம் 5) வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களை பெற பான் கார்டு கட்டாயம்.
மத்திய அரசின் அலட்சியமே தொடர் ரயில் விபத்துகளுக்கு காரணம் என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருவதாக சாடிய அவர், இன்னும் எத்தனை காலத்துக்கு மக்கள் இதனை பொறுத்துக்கொள்ள வேண்டும்? எனவும் வினவியுள்ளார். முன்னதாக, இன்று ஹவுராவில் இருந்து மும்பை சென்ற ரயில், ஜார்கண்டில் தடம்புரண்டு 2 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 4.49 லட்சம் ரேஷன் அட்டைகள், இடம்பெயர்தல், இறப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 2023இல் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரருக்கு நகல் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 36,954 ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, உப்பு போதுமான இருப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுத்து, வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய முடியும். இதற்கு தனித்தனி எண்கள் உள்ளன. அவற்றை காணலாம். *SBI – 09223766666 *Indian Bank – 09289592895 *IOB – 84240 22122 *PNB – 1800 180 2223 * Canara- 09015483483 *Axis – 1800-419-5959 * City Union- 9278177444 * HDFC- 1800 270 333 *ICICI – 9594 612 612 *Karur Vysya- 09266292666.
கேரளாவில் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் பாதிப்புக்குள்ளான வயநாடு சூரல்மலையில் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முகாமாக செயல்பட்ட பள்ளி ஒன்றின் மீது அதிகாலையில் நிலச்சரிவு நேரிட்டதால், அங்கிருந்த 100க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை. மழை அதிகமானதால் அங்கிருந்த சிலர், முன்கூட்டியே வேறு முகாமிற்கு மாற்றப்பட்டதால் அவர்கள் உயிர்தப்பினர்.
வார நாள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாளாகவும், அந்த நாளில் அக்கடவுள் குடிகொண்டுள்ள கோயிலுக்கு சென்று மனமுருகி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்றும் ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (இன்று) அனுமனுக்கு உகந்த நாளென்றும், இந்நாளில் அனுமன் கோயில் சென்று அவருக்குப் பிடித்த வடை, வெண்ணெய் சாற்றி வழிபட்டால் வேண்டியது நிறைவேறுமென்று கூறப்பட்டுள்ளது.
எர்ணாகுளம்-பெங்களூரு இடையே வாரம் 3 நாள்களுக்கு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே 12 நாள்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு நாளை, ஆக 2, 4, 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25 தேதிகளில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ஆக 1, 3, 5, 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26 தேதிகளில் இயக்கப்படுகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி, ராகுல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வயநாடு <<13736464>>நிலச்சரிவு<<>> குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, தற்போதைய நிலவரம், மீட்பு பணிகள் குறித்து கேட்ட அவர்கள், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ₹2 லட்சம் இழப்பீடு, காயமடைந்தோருக்கு ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
தொல்லியல் துறைத் தேர்வு, அருங்காட்சியக பணிகளுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற TNPSC-ன் அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் எதிலும் சமஸ்கிருத பாடம் இல்லாத நிலையில், அதில் எவ்வாறு பட்டம் பெற முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், தேர்வாணையத்தின் அறிவிப்பை ரத்து செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து ₹51,080க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹6,385க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ₹89க்கும், கிலோவிற்கு ₹500 குறைந்து ₹89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.