India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ➤RRB வாரியத்தில் நிரப்பப்படவுள்ள 7,951 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ➤செந்தில்பாலாஜியின் நீதிமன்றக்காவல் 50ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ➤கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அனைத்து நாடுகளும் பதக்க வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், இந்தியா இதுவரை 1 பதக்கம் (வெண்கலம்) மட்டுமே வென்று பதக்க பட்டியலில் 23வது இடத்தில் உள்ளது. 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், தென் கொரியா, ஆஸ்திரேலியா 2, 3வது இடத்திலும் உள்ளன.
கிரெடிட் கார்டுக்கான கட்டண விதிமுறைகளை HDFC வங்கி மாற்றியுள்ளது. அதன்படி, PayTM, CRED, MobiKwik போன்ற 3ஆம் தரப்பு செயலிகள் மூலம் வாடகை செலுத்த கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 1% கட்டணம் வசூலிக்கப்படும். ₹50,000க்கு மேல் Utility Bills செலுத்தினாலும், பெட்ரோல், டீசல் போன்ற எரிப்பொருள் நிரப்ப ₹15,000க்கு மேல் பயன்படுத்தினாலும் 1% கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விதிகள் ஆக.1 முதல் அமலுக்கு வருகிறது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு (1900), பாரிஸ் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இடையே ஒரே ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் இங்கிலாந்து தங்கப் பதக்கமும், பிரான்ஸ் வெள்ளிப் பதக்கமும் வென்றன. அன்றைய காலத்தில் பிரான்ஸில் கிரிக்கெட்டுக்கு போதிய ஆதரவு இல்லை.
உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு வயதினர் எவ்வளவு நேரம் தூங்கலாம் என்பது குறித்த அமெரிக்க நோய் தடுப்பு மையத்தின் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதன்படி 13-17 வயதினர் 8 – 10 மணி நேரமும், 18-60 வயதினர் குறைந்தபட்சம் 7 மணி நேரமும், 61-64 வயதினர் 7 – 9 மணி நேரமும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 – 8 மணி நேரமும் உறங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
*மேஷம் – நன்மை தேடி வரும் *ரிஷபம் – ஆதாயம் அடைவீர்கள் *மிதுனம் – போட்டி ஏற்படும் *கடகம் – புகழ் உண்டாகும் *சிம்மம் – லாபம் அடைவீர்கள் *கன்னி – தாமதம் ஏற்படலாம் *துலாம் – முயற்சி திருவினையாக்கும் *விருச்சிகம் – வெற்றி பெறுவீர்கள் *தனுசு – ஆதரவு பெருகும் *மகரம் – பரிசு கிடைக்கும் *கும்பம் – நிம்மதியான நாளாக அமையும் *மீனம் – உயர்வு உண்டாகும்.
அரசு தொடர்பான தகவல்களை சரிபார்க்கவும், போலி செய்திகளில் இருந்து மக்களை விழிப்புணர்வு பெற செய்யவும், PIB Fact Check என்ற பக்கத்தை சமூக வலைதளங்களில் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில், அரசு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் சரிபார்க்க முடியும். 8799711259 என்ற எண்ணிலும், factcheck@pib.gov.in என்ற இணைய தளத்திலும் அரசு தகவல்களை பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாணவர்களின் மோதலை தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் அடியாட்களை அழைத்து வந்து சக மாணவர்களை பள்ளியிலேயே தாக்கியுள்ளார். இதனை தடுக்கச் சென்ற ஆசிரியர் சிவகுமாருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து, அவரும் காயமடைந்த மாணவர் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் ரோகன் போபண்ணா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் போபண்ணா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இரட்டையர் பிரிவில் உலகில் அதிக வயதான (43) நபரான போபண்ணா, அர்ஜுனா, பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
சிவகங்கையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பாஜக பிரமுகர் செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அப்போது, காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற வசந்த் என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த சார்பு ஆய்வாளர் பிரதாப், வசந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.