India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை வளர்த்தெடுக்க கம்பீர் விரும்புவதாக நியூசி., முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கணித்துள்ளார். 10 ஆண்டுகள் கேப்டனாக நீடிக்க கில்லால் முடியும் எனவும், ஆனால் அவர் தற்போது அதற்கு தயாராக இல்லாததால் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அனுபவமிக்க கேப்டன்களிடம் களத்தில் பயிற்சி பெற கம்பீர் இப்படியொரு அருமையான முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 7 ▶குறள்: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. ▶பொருள்: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
நியூசிலாந்தில் வளர்ப்பு நாய்களுக்கு அதீதமாக உணவளித்த பெண்ணுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மதிப்பில் சுமார் ₹60,154 இழப்பீடு வழங்கவும், நாய்கள் வளர்க்க ஒரு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் அப்பெண்ணின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட Nuggi என்ற நாய் அதீத பருமனால் நடக்கவும், மூச்சு விடவும் முடியாமல் சிரமப்பட்ட நிலையில் உயிரிழந்தது.
இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்னையை தீர்க்க மற்ற நாடுகளின் உதவி தேவை இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான உறவு சீராக இல்லை என்பது உண்மைதான் எனவும், இரு நாடுகளும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இரண்டும் பெரிய நாடுகள் என்பதால், மற்ற நாடுகள் இப்பிரச்னைகளில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்க தேசத்திற்கு எதிரான தொடரில் இருந்து அவர் பவுலிங் பயிற்சியாளராக செயல்படுவார் என கூறப்படுகிறது. கம்பீரின் கோரிக்கையை ஏற்று பிசிசிஐ இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வங்க தேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் செப்.19 முதல் தொடங்குகிறது.
டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது. வருங்காலங்களில் இது போன்று நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்க 30 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (ஜூலை 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
இன்று (ஜூலை 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
இன்று (ஜூலை 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ➤RRB வாரியத்தில் நிரப்பப்படவுள்ள 7,951 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ➤செந்தில்பாலாஜியின் நீதிமன்றக்காவல் 50ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ➤கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.