India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக ஆட்சியில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்களே அச்சத்தில் உள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். மக்களவையில் ராகுல் பேசும்போது, பாஜகவில் ஒருவர் மட்டுமே பிரதமராக வர முடியும் என மோடியை விமர்சித்த அவர், ராஜ்நாத் சிங் பிரதமராக வர முயற்சித்தால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார். இந்திய மக்கள் அனைத்து விஷயங்களிலும் ஒருவித அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீ., ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெற்றிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் 3ஆவது இடம் பிடித்ததால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு இந்திய இணை தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் 4ஆம் இடம்பிடித்த தென் கொரியாவின் ஓயே ஜின் – லீ வோன்ஹோ இணையுடன் இந்திய இணை மோதவுள்ளது.
தமிழக அரசின் தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என TNPSC அறிவித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இதனை மறைமுகமான சமஸ்கிருதத் திணிப்பாக தமிழுணர்வாளர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், தரவுகளை ஆய்வு செய்யவும், தர்க்க ரீதியில் சான்றுகளை நிறுவவும் சமஸ்கிருதத்தையும் அறிந்திருப்பது நல்லதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்களையும் முன்வைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நாளை முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கப்பெறும் (குறிப்பாக இடைக்கால பல்லவர் & சோழர்) கல்வெட்டுகள் & சாசனங்கள் பிராகிருதம் & சமஸ்கிருதம் மொழியில் நிறைய காணக் கிடைக்கின்றன. அவற்றை ஆய்ந்து அறிய, உலகிற்கு தொல் தென்னகத்தின் வரலாற்றை நிறுவ அம்மொழிகளோடு சீனம் உள்ளிட்டவற்றையும் தமிழர்கள் கற்க வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கூடுதல் விலையில் செலுத்துவதாக புகார் எழுந்தது. இதைத் தடுக்கும் வகையில், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்றும், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை 16 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் கோலாகலத்தில் ஒட்டுமொத்த விளையாட்டு உலகும் திருவிழா கோலம் பூண்டுள்ளது. சர்வதேச வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்துவரும் இந்நேரத்தில், பாலஸ்தீனத்தின் முதல் ஒலிம்பிக்ஸ் பங்கேற்பாளரும், தடகள வீரருமான அபு மராஹீல் வதைவலி மிகுந்த மரணத்தை எய்தியுள்ளார். சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர் நுசிராத் முகாமில் இருந்து மேல் சிகிச்சைக்காக ரஃபா எல்லையைத் கடக்க முயன்றபோது உயிரிழந்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ வழக்கிலும் ஜாமின் கோரும் அவரது மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், சிபிஐ வழக்கில் இதுவரை கிடைக்காததால், கெஜ்ரிவால் சிறையிலுள்ளார்.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளதாக ஆணையர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார். கோரம் (போதுமான உறுப்பினர்கள்) இல்லாததால் தீர்மானம் இயற்கையாகவே தோல்வி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். திமுக கவுன்சிலர்கள் 22 பேர் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில், வாக்கெடுப்புக்கு முதல்நாள் அவர்கள் மகாபலிபுரத்திற்கு சுற்றுலாவுக்கு சென்றனர்.
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணமில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, திருமங்கலம் சுற்று வட்டாரத்தில் நாளை கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தையில், உள்ளூர்காரர்கள் ஆதார் அட்டையை காட்டி கட்டணமின்றி பயணிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Sorry, no posts matched your criteria.