India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மழை முக்கிய காரணமாக இருந்ததாக இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியுள்ளார். மைதானத்தின் அவுட் ஃபீல்டு ஈரமாக இருந்ததும், தாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததுமே இந்தியா வெற்றி பெற முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அணி 161 ரன்கள் எடுத்த நிலையில், மழை காரணமாக இந்திய அணிக்கு 8 ஓவரில் 78 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விழாவையொட்டி, சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட போது, தன்னை சுற்றி பாதுகாப்பு கவசம் அமைத்த பெண் காவலர் மிகவும் துணிச்சலானவர் என டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். தன்னை பாதுகாக்கும் அளவுக்கு அவர் உயரமாக இல்லை என தவறாக விமர்சிக்கப்பட்டதாகவும், தன்னை காக்க தோட்டாவை உடலில் வாங்குவதற்கு கூட அவர் தயாராக இருந்ததாகவும் டிரம்ப் கூறியுள்ளார். முன்னதாக, தொழிலதிபர் எலான் மஸ்க் உள்பட பலரும் அந்த பெண் காவலரை விமர்சித்து இருந்தனர்.
தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், அக்டோபர் 2ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். ஜன் சூரஜ் என்ற அமைப்பை நடத்தி வரும் அவர், காந்தி ஜெயந்தி அன்று அதனை கட்சியாக மாற்றி பிஹார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். முன்னதாக, இவர் 2021 தேர்தலில் திமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார். கட்சி தொடங்கியபின் அப்பணியை அவர் கைவிடப் போவதாகவும் தெரிகிறது.
அழகின் ஒரு அங்கமான தலைமுடி திடீரென உதிர்வது பெரும் கவலையைத் தரும். தலைமுடி உதிர்வு பிரச்னைக்கு வீட்டில் உள்ள எளிய உணவுகளை உட்கொள்வதன் மூலமே நாம் தீர்வு காண முடியும். குறிப்பாக, நமது உணவில் முட்டை, ஓட்ஸ், பீன்ஸ், பசலைக்கீரை, சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். சூரிய காந்தி விதையை சாப்பிட்டாலும் தீர்வு காணலாம் என்று உடல்நல ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர்.
➤ஆசியக் கோப்பை மகளிர் T20 தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கையிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. ➤ மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET-UG தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ➤தமிழகம் முழுவதும் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல் விலையில்லா சீருடை வழங்கப்பட உள்ளது. ➤தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி செப். 3 வரை நடைபெற உள்ளது.
‘இந்தியன் -2’ திரைப்படத்திற்கு சொல்லிக் கொள்ளும்படி பெரிய வரவேற்பு இல்லாததால், திட்டமிட்டதற்கு முன்பாகவே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் ரிலீஸாகும் நிலையில், பெரிய தொகை கொடுத்து ‘இந்தியன் -2’ வாங்கப்பட்டதால் 4 வாரங்களுக்குள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
பேராசிரியர்களின் போலி நியமன முறைகேட்டில் பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 353 பேராசிரியர்கள், 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவது கண்டறியப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் கூறியிருந்த நிலையில், ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
குஜராத்தில் கடந்த 2 நாள்களில் ₹110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க இலாகா துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 26.26 லட்சம் டிரமடோல் போதை மாத்திரைகளும், நேற்று 42.24 லட்சம் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் சந்தை மதிப்பு ₹110 கோடியாகும். மேலும், அகமதாபாத்தில் ஆளில்லா குடோனில் இருந்தும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் மின்சார இயக்க ஊக்குவிப்புத் திட்டம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு, மானியத் தொகை கூடுதலாக ₹278 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனங்களுக்கு ₹10,000, சிறிய மின்சார 3 சக்கர வாகனங்களுக்கு ₹25,000, 3 சக்கர கனரக வாகனங்களுக்கு ₹50,000 மானியமாக வழங்கப்படுகிறது. அதர், பஜாஜ், ஓலா உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவன வாகனங்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.