India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தாவில், பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவத்துறை இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஆஸ்பத்திரிகளில் நாளை கூடுதல் மருத்துவர்கள் பணியாற்றவும், இதனை மாவட்ட இணை, துணை இயக்குநர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏமன் தலைநகர் சனாவில் அல்-ஹதீப் கிராமத்தில் எப்போதும் மழை பெய்வதில்லை. கடல் மட்டத்தில் இருந்து 3,200 மீ உயரத்தில் இருப்பதால், மழை மேகங்கள் குவிவதில்லை. சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2,000 மீட்டருக்குள் குவியும் என்பதால், இக்கிராமத்தின் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன. மேலும், இந்த கிராமத்தில் நீர் ஆதாரங்கள் போதுமான அளவிற்கு இல்லாததும் மழை பெய்யாததற்கு காரணம் என கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று வெளியான ‘தங்கலான்’ படம் வசூலில் கலக்கி வருகிறது. வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ₹26.45 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கிடைத்துள்ளதால் வரும் நாள்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இப்படம் எப்படி இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க.
கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டோம் என அதிமுக அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக, ஆக.18ஆம் தேதி அவரது உருவம் பொறித்த ₹100 நாணயம் வெளியிடப்படுகிறது. இதில் பங்கேற்க தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், பிரதமர் மோடியிடம் போனில் பேசியுள்ளார். இத்தகவலை X தளத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அங்கு இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என, யூனுஸ் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் ஆதரவையும் அவர் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை அதிகரித்து வரும் சூழலில், அதன் இறக்குமதி ஏப்ரல் – ஜூலை காலக்கட்டத்தில் 4.23% சரிந்து, ₹1.05 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹1.10 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 10.65% குறைவாகும். எனினும், பண்டிகை காலம் தொடங்குவதாலும், இறக்குமதி வரி குறைக்கப்பட்டதாலும், செப்டம்பரில் நகை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இம்மாதம் முதல் ரேஷன் அட்டையை விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என அரசு அறிவித்திருந்தது. 2.40 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 2 லட்சம் அட்டைகள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை விண்ணப்பித்தவர்களின் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்ததற்காக, நித்யா மேனனுக்கு சிறந்த நடிகை விருதும், அப்படத்தில் பணியாற்றிய ஜானி, சதீஷூக்கு நடன கலைஞர்களுக்கான விருதும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விருது பெறும் அனைவருக்கும் நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். விருது பெறும் அனைவரும், அதற்கு தகுதியானவர்கள் எனவும் புகழ்ந்துள்ளார்.
இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாநில அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பெற, மருத்துவரின் தந்தை மறுத்துள்ளார். இந்த தொகையை பெற்றுக்கொண்டால், அது தனது மகளுக்கு வலியை கொடுக்கும் என்றும், தனக்கு நியாயம்தான் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.