news

News August 16, 2024

NEET தோல்வியால் மாணவர் தற்கொலை?

image

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 16, 2024

G.O.A.T படத்தின் புதிய போஸ்டர்

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘G.O.A.T’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ள நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யின் தோற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். யாரெல்லாம் ட்ரெய்லருக்கு வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.

News August 16, 2024

பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

image

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது. 358 காலிப் பணியிடங்களுக்கு, கடந்த ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சிபெற்ற 644 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான விவரங்களையும் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

News August 16, 2024

வாக்குப்பதிவுக்கான சூழல் வயநாட்டில் இல்லை: CEC

image

வயநாட்டில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லையென, CEC ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியான ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு வாக்குப்பதிவு நடத்துவதற்கான சூழல் இல்லை என்றார். விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறினார்.

News August 16, 2024

அதிக தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்கள்

image

70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிக தேசிய விருதுகள் (7) வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார் ரஹ்மான். இளையராஜா (5), விஷால் பரத்வாஜ் (4), ஜெய்தேவ் (3) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News August 16, 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் வெற்று முழக்கம்: காங்கிரஸ்

image

4 மாநிலங்களுக்கு கூட, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியாத சூழலே இருப்பதாக, காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானாவிற்கு தேர்தல் தேதிகள் வெளியான நிலையில், மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் சேர்த்து தேர்தல் தேதிகளை எதிர்பார்த்ததாக, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நேற்றுதான் பிரதமர், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி உரக்க பேசியதாக குறிப்பிட்ட அக்கட்சி, ஏன் இந்த வெற்று முழக்கம் என்றும் வினவியுள்ளது.

News August 16, 2024

‘வாழை’ Vs ‘கொட்டுக்காளி’.. வெற்றி வாகை யாருக்கு..?

image

பெருங்கடலாக இருக்கும் திரைத்துறையில், சொற்பமான சிறிய படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. அந்த வரிசையில், ‘வாழை’, ‘கொட்டுக்காளி’ ஆகிய இரு படங்களுமே வரும் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன. சர்வதேச அளவில் விருதுகளை குவித்த இவ்விரு படங்களும், பாசிடிவ் வைஃபோடு திரைக்கு வருவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீங்கள் திரையில் காண காத்திருக்கும் திரைப்படம் எது…?

News August 16, 2024

மாநில நல்லாசிரியர் விருது.. கல்வித்துறை உத்தரவு

image

மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை, ஆகஸ்ட் 19க்குள் சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் செப்.5இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 386 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை, மாவட்ட, வட்டாரக்கல்வி அலுவலர்கள் துரிதமாக முடிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

News August 16, 2024

சீனாவில் அதிகரிக்கும் ரோபோ டாக்ஸிகள்

image

சீனாவில் டிரைவர் இல்லாத ரோபோ டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வுகான் நகரில் மட்டும் 500 டாக்ஸிகள் பயன்பாட்டில் உள்ளன. உலகில் அதிக ரோபாே டாக்ஸி நெட்வொர்க் கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது. அமெரிக்க நிறுவனங்களை கவரும் வகையில், சீனாவின் தொழில்நுட்ப, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சமீபகாலமாக இதில் முதலீட்டை அதிகரித்துள்ளன. இது தங்களது வேலைக்கு ஆபத்து என, வாகன ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

News August 16, 2024

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தந்த மார்க்கெட்

image

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 1.64% உயர்ந்து 80,436 புள்ளிகளுடனும், நிஃப்டி 1.65% உயர்ந்து 24,541 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வங்கி, ஆட்டோ, FMCG, IT, ரியால்டி, உலோகம் உள்பட அனைத்துத்துறை பங்குகளும் ஏற்றத்தில் நிறைவடைந்தன.

error: Content is protected !!