India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை (SMC) கட்டமைக்கும் 2ஆவது கூட்டம், நாளை நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் 12,117 அரசுப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளைய கூட்டத்தில் 8,000க்கும் அதிகமான பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களின் நலனை மேம்படுத்த பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பதவிக்கு மொத்தம் 2006 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.17) கடைசி நாளாகும். வயது: கிரேடு ‘சி’-க்கு 18-30, கிரேடு ‘டி’ 18-27 இருக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி. இணையதளம்: <
ரன்பிர் கபூர், அலியா பட் நடிப்பில் வெளியான ‘பிரம்மாஸ்திரா 1’ படத்தின் “கேசரியா..” பாடலை பாடிய அர்ஜித் சிங்கிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே ‘பத்மாவத்’ படத்தின் “பிந்தே தில்…” பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளராக ‘பிரம்மாஸ்திரா 1’ படத்திற்காக பிரிட்டம் தேர்வாகியுள்ளார். சிறந்த VFX திரைப்படமாகவும் ‘பிரம்மாஸ்திரா 1’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். செப்.18, 25 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுகளுக்குப்பிறகு, JKஇல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதே போல, ஹரியானாவில் அக்.1ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமாக அக்.4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியையொட்டி மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி, அம்மன் கோயில்களில் இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க முடியாத சுமங்கலிப் பெண்கள், தங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, 2 வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து தாம்பூலம் வழங்கி ஆசிபெறலாம். அவ்வாறு செய்தால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் இரவு வினேஷ் போகத் உயிரிழந்து விடுவார் என நினைத்ததாக அவரது பயிற்சியாளர் Woller Akos சமூக வலைதளத்தில் பதிவிட்டு உடனே நீக்கியது தற்போது தெரிய வந்துள்ளது. எடையை குறைக்க வேண்டி கடுமையான தொடர் பயிற்சிகள் மேற்கொண்டதால் வினேஷ் உருக்குலைந்து விட்டதாகவும், ஆனால் எப்படியோ மீண்டு வந்ததாகவும் அவர் ஹங்கேரி மொழியில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பியபோது வினேஷ் உருக்கமாக பேசியதையும் பயிற்சியாளர் பதிவு செய்திருந்தார். நெருக்கடியான சூழலில் உலகின் NO.1 வீராங்கனையை வீழ்த்தியதை நினைவில் கொள் என பயிற்சியாளர் கூறியதை வினேஷ் சுட்டிக் காட்டியதாகவும், பதக்கங்கள் வெறும் பொருள்கள்தான் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தன்னுடைய இலக்கை எட்டிவிட்டதாக வினேஷ் கூறியதாகவும் பயிற்சியாளர் பதிவிட்டிருந்தார்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தி வருவதாக EX அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. விலைவாசி, மின்கட்டணம், வரிகள் உயர்ந்து விட்டதாக சாடினார். அம்மா உணவகத்தை திமுக அரசு நீர்த்து போகச் செய்து விட்டதெனவும் அவர் குற்றம்சாட்டினார்.
பெண்கள் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகள் குறித்து ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம். *அதிகாலை எழுந்து குளித்து சூரிய வழிபாடு மேற்கொள்ளுதல் * தினமும் கோயில்களுக்கு செல்லும் வழக்கத்தை கடைபிடித்தல் *சிரித்த முகத்துடன் புன்முறுவலுடன் பிறரிடம் பழகும் முறையை தொடருதல் *உணவு, உடையை பிறருக்கு தானமாக அளித்தல் *பசுவுக்கு பழம், கீரை போன்றவற்றை உணவளித்தல்.
நடிகர் தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ வருகிற 23ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த இத்திரைப்படம் கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 4 சகோதரர்களின் வாழ்க்கையில் நடப்பதை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படம் திரையரங்குகளில் ₹150 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.