India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியில் IAS பயிற்சி மையத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. உ.பியைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலங்கானாவின் தான்யா சோனி (25), கேரளாவின் நவீன் டால்வின் (28) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரேயா கடந்த ஏப்ரல் மாதமும், தான்யா ஒன்றரை மாதங்களுக்கு முன்பும் பயிற்சி மையத்தில் இணைந்துள்ளனர். நவீன் 8 மாதங்களாக டெல்லியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் இயங்கி வந்த 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. நேற்று முன் தினம் பெய்த மழையில் கட்டுமானத்தின் அடித்தளத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் பலியான நிலையில், கட்டுமான விதிகளை மீறியதாக சீல் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் டெல்லி முழுவதும் சோதனை நடத்தப்படும் என டெல்லி மேயர் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
இன்று (ஜூலை 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
இன்று (ஜூலை 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ₹5,557 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ➤ஜம்மு பிராந்தியத்தில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதன் எதிரொலியாக அங்கு கூடுதலாக 2000 ராணுவ வீரர்களை நிலை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ➤பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கரிடம் போனில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை பெருமையடையச் செய்துள்ளதாக வாழ்த்தியுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக திகழ்வதாகவும், இந்த பதக்கம் அடுத்தடுத்த போட்டிகளுக்கு உத்வேகமாக அமையும் எனவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், வீரர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த SL, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், 7.3 ஓவர்களுக்குள் 72 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 6.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசனும், நண்பராக சத்யராஜும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நாகர்ஜுனாவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால், வேறொரு தெலுங்கு நடிகரை படக்குழு அணுகி வருகிறதாம்.
*மேஷம் – பாராட்டு பெறுவீர்
*ரிஷபம் – நன்மை தேடி வரும்
*மிதுனம் – அமைதியாக இருந்து சாதிப்பீர்
*கடகம் – வீண் செலவுகளை தவிர்க்கவும்
*சிம்மம் – அச்சம் தவிர்க்கும் நாள்
*கன்னி – கவலை கொள்ள வேண்டாம்
*துலாம் – வரவு அதிகரிக்கும்
*விருச்சிகம் – தாமதம் ஏற்படும்
*தனுசு – ஜெயம் உண்டாகும்
*மகரம் – ஆதரவு கிடைக்கும் *கும்பம் – வெற்றி தேடி வரும் *மீனம் – ஆக்கப்பூர்வமான நாள்
Sorry, no posts matched your criteria.