news

News July 28, 2024

e-KYC பதிவு செய்ய ஜூலை 31 கடைசி நாள்

image

PM கிஷான் திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6000 வழங்கப்படுகிறது. 3 தவணைகளாக வழங்கப்படும் இந்த நிதியுதவியை பெற, e-KYC பதிவு செய்ய வேண்டும். இதற்கான அவகாசம் ஜூலை 31 உடன் முடியவுள்ள நிலையில், விவசாயிகள் தங்களது விவரங்களை உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 17 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், e-KYC பதிவு செய்யாதவர்களுக்கு 18ஆவது தவணை பணம் கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

News July 28, 2024

நீர் யானை தாக்கி பராமரிப்பாளர் பலி

image

ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா உயிரியல் பூங்காவில் நீர் யானை தாக்கியதில், அதன் பராமரிப்பாளர் உயிரிழந்தார். சமீபத்தில் குட்டியை ஈன்ற நீர் யானை, அதன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முயன்றவரை பலமாக தாக்கியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

News July 28, 2024

இளைஞரின் கழுத்தில் சிக்கிய ஸ்கூட்டர் ஸ்டாண்ட்

image

புனேவில் 19 வயது இளைஞரின் கழுத்தில் ஸ்கூட்டர் ஸ்டாண்ட் சிக்கிக் கொண்ட சம்பவம் காண்போரை அதிர வைத்துள்ளது. அவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் ஸ்டாண்ட் கீழ் தாடைக்கும் கழுத்துக்கும் இடையே எலும்பில் சிக்கியது. இதனை மருத்துவர்கள் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் அகற்றினர்.

News July 28, 2024

7.2 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றி

image

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மே.இ.தீவுகள் அணி இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 282 & 175 ரன்கள் குவித்தது. தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்த இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 7.2 ஓவர்களில் 87 என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டியது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 28 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.

News July 28, 2024

LIC மதிப்பு ஒரே வாரத்தில் ₹44,907.49 கோடி உயர்வு

image

இந்தியாவில் உள்ள டாப் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ₹1,85,186.51 கோடி அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக LIC மதிப்பு ₹44,907.49 கோடி உயர்ந்து, ₹7,46,602.73 கோடியாக உள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்பு ₹35,665.92 கோடி அதிகரித்து, ₹7,80,062.35 கோடியாக உள்ளது. பட்ஜெட் எதிரொலியாக தொடர் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, வர்த்தக வார இறுதி நாள்களில் வளர்ச்சி கண்டது.

News July 28, 2024

CUET-UG தேர்வு முடிவுகள் வெளியீடு

image

CUET-UG தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக ஆண்டுதோறும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, நாடு முழுவதும் இருந்து 13.48 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகளை nta.ac.in மற்றும் exams.nta.ac.in/CUET-UG என்ற இணையதள முகவரியில் அறியலாம்.

News July 28, 2024

மண் சரிவில் சிக்கி 11 பேர் பலி

image

சீனாவில் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் கிழக்குப்பகுதி முழுவதும் கேமி புயலால் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், ஹூனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 11 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News July 28, 2024

இந்திய அணி பந்துவீச்சு

image

இலங்கைக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில், டாஸ் வென்ற IND அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. SLக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள IND, 3 T20 போட்டிகளில் விளையாடுகிறது. கென்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் IND அணி, 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2ஆவது போட்டி நடைபெறும் பல்லெகெலே பகுதியில் மழை பெய்ததால் போட்டி சற்று தாமதமாக தொடங்குகிறது. SLக்கு எதிரான T20 தொடரை SKY தலைமையிலான படை வெல்லுமா?

News July 28, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News July 28, 2024

காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

image

கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 1.50 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால், தமிழகத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!