India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்வீடனில் ஒருவருக்கு Mpox (குரங்கு அம்மை) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேகப் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் தொற்று பரவி வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது பரவத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தொற்று பரவலின் தீவிரத் தன்மையை உணர்ந்த WHO, நேற்று அவசர நிலை பிரகடனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அவந்தா குழும ₹678 கோடி சொத்துக்களை ED முடக்கியது. தொழிலதிபர் கவுதம் தாபரின் (படத்தில் இருப்பவர்) அவந்தா குழுமம், SBI உள்ளிட்ட வங்கிகளிடம் ₹2,400 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாததோடு, ₹1,307 கோடியை வேறு நிறுவனத்துக்கு திருப்பி விட்டதை ED கண்டுபிடித்தது. இதுதொடர்பாக தாபர் மீது வழக்குப்பதிந்து ₹14 கோடி சொத்தை ஏற்கெனவே ED முடக்கியது.
மும்பையில் ₹100 கோடியில் சொகுசு பங்களா, ஹைதராபாத்தில் தலா ₹30 கோடி மதிப்பில் 2 அப்பார்ட்மெண்ட்களை நயன்தாரா வைத்துள்ளார். ₹50 கோடியில் தனி விமானம், ₹2.76 கோடி மதிப்பில் 2 சொகுசு கார்களும் வைத்துள்ளார். இதுபோக ₹10 கோடியை Lip Balm நிறுவனத்திலும், அரபு நாடுகளில் எண்ணெய் தொழிலில் ₹100 கோடியும் முதலீடு செய்துள்ளார். மேலும், ₹50 கோடியில் ரவுடி பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தையும் கொண்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் முதல்முறையாக 10 நாள்களில் ஒரு இருசக்கர வாகன விபத்து கூட நடைபெறாதது தெரிய வந்துள்ளது. சுமார் 45 லட்சம் வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், மொத்த விபத்துகளில் 45% அவையே காரணமாக இருந்தன. இந்நிலையில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் மேற்பார்வையில் போக்குவரத்து போலீஸ் எடுத்த விழிப்புணர்வால் விபத்து நடைபெறாதது புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
தேசிய கல்வி பாடத் திட்டத்தை (NCERT) 9-12ம் வகுப்பு வரை கட்டாயமாக்கி CBSE பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பள்ளிகளுக்கு CBSE அனுப்பியுள்ள உத்தரவில், இந்த கல்வியாண்டு முதல் 9-12 வகுப்புகளில் NCERT குழு உருவாக்கிய புத்தகங்களை பயன்படுத்துவது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 1-7 வகுப்புகள், அந்த நூல்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
புரோ கபடி 11ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில், சச்சின் டன்வார் என்ற வீரரை தமிழ் தலைவாஸ் அணி ₹2.15 கொடுத்து வாங்கியுள்ளது. நடப்பு ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் இருக்கிறார். போன சீசனில் பாட்னா அணிக்காக விளையாடிய அவர் அரையிறுதி வரை கொண்டு சென்றார். அவருக்கு அடுத்ததாக முகமது ரேஸாவை ₹2.07 கோடிக்கு ஹரியானா வாங்கியுள்ளது. மொத்தம் 8 பேர் ₹1 கோடிக்கு மேல் வாங்கப்பட்டனர்.
திமுகவின் தேசிய பற்றுக்கு யாரும் சான்றிதழ் அளிக்க தேவையில்லை என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். திராவிடம் பிடிக்கவில்லை என்று கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தில் உள்ள திராவிடத்தை எடுத்துவிட்டு பாடுவாரா என கேள்வி எழுப்பிய அவர், அப்படி செய்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறைக்கு தான் செல்ல வேண்டும் எனவும் அவர் சாடினார். முன்னதாக, திராவிடம் பிரிவினையை ஆதரிப்பதாக ஆளுநர் விமர்சித்திருந்தார்.
நபிகள் நாயகம் முஸ்லிம் மக்களுக்காக 4 கடமைகளை முன் வைத்துள்ளார். அவை என்னென்ன?
1) பெற்றோருக்கு துஆ (வணக்கம்) செய்து பாவ மன்னிப்பு கோருவது
2) பெற்றோர் வாக்குறுதியை நிறைவேற்றுவது
3) நண்பர்களை கண்ணியப்படுத்துவது
4) உறவினர்களுடன் சேர்ந்து இருப்பது.
இந்த 4 கடமைகளை செய்ய தவறக் கூடாது என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதைக் கண்டித்து ஸ்டிரைக் நடத்தப்படுவதாக IMA தெரிவித்துள்ளது. நாளை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை ஸ்டிரைக் நடைபெறும் எனவும், அத்தியாவசிய சேவை பிரிவுகள் மட்டுமே செயல்படும் என்றும் கூறியுள்ளது.
மத்திய அரசு வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் சாதி, மதம், இன பாகுபாடுகளை கடந்து அனைவரும் நாட்டு விடுதலைக்காக போராடியதாக தெரிவித்த அவர், சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள் தியாகிகளின் பட்டியலில் இடம்பெற விரும்புகின்றார்கள் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.