India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கர், பகவத் கீதை படித்து, அதன்படி செய்ய வேண்டியதை செய்ய முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். பதக்கம் வென்ற பின் பேட்டியளித்த அவர், ”எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். நாம் விதியை எதிர்த்துப் போராட முடியாது. என்னிடம் உள்ள முழு ஆற்றலையும் செலுத்தி போராடினேன்” என்று கூறியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியை கூடுதல் நேரம் பேசவிடாமல் தடுத்தது கண்டனத்துக்கு உரியது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில், மம்தா பானர்ஜி கூடுதலாக 5 நிமிடம் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மோடி முதல்வராக இருந்த போது நிதி ஆயோக் கூட்டத்தில் 15 முதல் 20 நிமிடம் வரை பேசியுள்ளார் என்றார்.
மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு குடியரசு தலைவர் முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ள அவரால் நாடு பெருமிதம் கொள்வதாகவும் கூறியுள்ளார். மனு பாக்கருக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2024-25 நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, ஒவ்வொரு நிதியாண்டிலும் 4 முறை நிதி முடிவுகளை வெளியிடும். அந்த வகையில், நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகள் ஆக.3ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மேலும் விவரங்களை <
மனு பாக்கரை நினைத்து நாடு பெருமிதம் கொள்வதாக மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் பாக்கர் தெரிவித்துள்ளார். மனுவுக்கு அரசாங்கம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பிலிருந்து அதிகப்படியான ஆதரவு கிடைத்ததாகவும், அதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வருமான வரி சட்டத்தின்படி, நெருங்கிய உறவினர்களுக்கு அளிக்கும் பரிசுப் பொருள்கள் மற்றும் பரிசுத் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டிய அவசியமில்லை. இதில், நெருங்கிய உறவினர் என்பது மனைவி, கணவன், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மகன், மகள் உள்ளிட்டோர் அடங்குவார்கள். மற்றவர்கள் அளிக்கும் பரிசுக்கு ₹50,000 வரை வரி கிடையாது. அதே போல, திருமணத்தில் பெறப்படும் அனைத்து பரிசுகளுக்கும் வரி விலக்கு உண்டு.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்கும் முன்பு, அதில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது நைஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை சின்டியா டிமிட்டியாயோவுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர், ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்தார். இதையடுத்து, ஊக்கமருந்து தடை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக அவரை சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆபாசப் படம் பார்த்து 9 வயது தங்கையை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன், அவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக தந்தையிடம் தெரிவிக்கப் போவதாக சிறுமி கூறியதால் பயந்த சிறுவன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சிறுவன், அவரது தாயார் உள்பட 3 பேர் கைதாகியுள்ள நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்னும் 3 நாள்களில் நிறைவடைகிறது. இந்நிலையில், 5 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை ITR தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% அதிகமாகும். இதனிடையே, ITR இணையதளத்தில் பிரச்னைகளை எதிர்கொள்வதாக பயனாளர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது.
மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர், வரலாற்று பதக்கத்தை வென்றுள்ளதாக பாராட்டியுள்ள அவர், இந்த சாதனையை எளிதில் நம்ப முடியவில்லை என்று வாழ்த்தியுள்ளார். ஒலிம்பிக்ஸில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.