India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய கல்வி பாடத் திட்டத்தை (NCERT) 9-12ம் வகுப்பு வரை கட்டாயமாக்கி CBSE பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பள்ளிகளுக்கு CBSE அனுப்பியுள்ள உத்தரவில், இந்த கல்வியாண்டு முதல் 9-12 வகுப்புகளில் NCERT குழு உருவாக்கிய புத்தகங்களை பயன்படுத்துவது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 1-7 வகுப்புகள், அந்த நூல்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

புரோ கபடி 11ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில், சச்சின் டன்வார் என்ற வீரரை தமிழ் தலைவாஸ் அணி ₹2.15 கொடுத்து வாங்கியுள்ளது. நடப்பு ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் இருக்கிறார். போன சீசனில் பாட்னா அணிக்காக விளையாடிய அவர் அரையிறுதி வரை கொண்டு சென்றார். அவருக்கு அடுத்ததாக முகமது ரேஸாவை ₹2.07 கோடிக்கு ஹரியானா வாங்கியுள்ளது. மொத்தம் 8 பேர் ₹1 கோடிக்கு மேல் வாங்கப்பட்டனர்.

திமுகவின் தேசிய பற்றுக்கு யாரும் சான்றிதழ் அளிக்க தேவையில்லை என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். திராவிடம் பிடிக்கவில்லை என்று கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தில் உள்ள திராவிடத்தை எடுத்துவிட்டு பாடுவாரா என கேள்வி எழுப்பிய அவர், அப்படி செய்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறைக்கு தான் செல்ல வேண்டும் எனவும் அவர் சாடினார். முன்னதாக, திராவிடம் பிரிவினையை ஆதரிப்பதாக ஆளுநர் விமர்சித்திருந்தார்.

நபிகள் நாயகம் முஸ்லிம் மக்களுக்காக 4 கடமைகளை முன் வைத்துள்ளார். அவை என்னென்ன?
1) பெற்றோருக்கு துஆ (வணக்கம்) செய்து பாவ மன்னிப்பு கோருவது
2) பெற்றோர் வாக்குறுதியை நிறைவேற்றுவது
3) நண்பர்களை கண்ணியப்படுத்துவது
4) உறவினர்களுடன் சேர்ந்து இருப்பது.
இந்த 4 கடமைகளை செய்ய தவறக் கூடாது என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதைக் கண்டித்து ஸ்டிரைக் நடத்தப்படுவதாக IMA தெரிவித்துள்ளது. நாளை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை ஸ்டிரைக் நடைபெறும் எனவும், அத்தியாவசிய சேவை பிரிவுகள் மட்டுமே செயல்படும் என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசு வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் சாதி, மதம், இன பாகுபாடுகளை கடந்து அனைவரும் நாட்டு விடுதலைக்காக போராடியதாக தெரிவித்த அவர், சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள் தியாகிகளின் பட்டியலில் இடம்பெற விரும்புகின்றார்கள் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மழை குறித்து IMD விடுக்கும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைக்கு என்ன அர்த்தம் எனத் தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் எச்சரிக்கை எனில் கனமழை பெய்யும். 24 மணி நேரத்தில் 6.4 செ.மீ.- 11.5 செ.மீ. வரை மழை பெய்யும். ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் மிக கனமழை பெய்யும். 11.5 செ.மீ.-20.4 செ.மீ. வரை மழை பெய்யும். சிவப்பு எச்சரிக்கை எனில், அதிகனமழை பெய்யும். 24 மணி நேரத்தில் 20.4. செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்.

தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு நகரமான ஹுவாலினில் இருந்து 34 கிமீ தொலைவில், 9.7 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இதனால் அந்நாட்டின் தலைநகர் தைபேவில் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

FAMILY MAN-2 வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நித்மோரும், சமந்தாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாக சைதன்யாவை டைவர்ஸ் செய்த பிறகு, நடிப்பில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில், ராஜ் நித்மோர் இயக்கிய FAMILY MAN-2 வெப் சீரிசில் நடித்த சமந்தா, அவர் இயக்கி வரும் சிட்டாடல் ஹனி பன்னி சீரிசிலும் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் 2 பேரும் காதல் வயப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாள்கள் கனமழை பெய்யக்கூடும் என RMC தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று RMC கூறியுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.