India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒலிம்பிக் வரலாற்றில், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறை, மனு பாக்கர் படைத்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், வெண்கலம் வென்றதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அதேபோல, பாரிஸ் ஒலிம்பிக்-2024இல் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கோச்சிங் சென்டர் உரிமையாளர் அபிஷேக் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் பயிற்சிக்கு கட்டடத்தின் அடித்தளத்தில் தங்கி படித்துக் கொண்டிருந்த 3 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த நிலையில், கட்டட விதிமீறல் நடைபெற்றுள்ளதாக கூறி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை, ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் வாங்கியுள்ளது. முன்னதாக, ஜூனில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.77% பங்குகளை, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் வாங்கியிருந்த நிலையில், தற்போது மேலும், 32.72% சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியா சிமெண்ட்ஸின் 55.49% பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ளது.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்களை ஸ்மிருதி மந்தனா 60 ரன்கள் குவித்தார். ரிச்சா கோஷ் 30 ரன்களும், ஜெமிமா ரோட்ரிகேஸ் 29 ரன்களும் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். . 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.
தமிழிசைக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் ஆளுநராக இருந்த அவர், அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இன்று புதிதாக 7 பேர் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே ஆளுநராக இருந்த தமிழிசை பெயர் அதில் இடம் பெறவில்லை.
மொபைல் நெட்வொர்க் சேவையை அளிப்பது போல, மலிவு விலை 4ஜி செல்போன்களையும் ஜியோ விற்று வருகிறது. அந்த வரிசையில், JIOBHARAT J1 என்ற பெயரில் புதிய 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ₹2,999ஆக நிர்ணயித்துள்ளது. ஆனால், அறிமுக சலுகையாக ₹1,799 விலைக்கு அந்த போனை விற்பனை செய்கிறது. 2,500 Mah பேட்டரி திறனும், 2.8 இன்ச் திரையும் கொண்டுள்ளது. மெமரியை 128 ஜிபி வரை நீட்டிக்க முடியும்.
காதி விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் 400% உயர்ந்துள்ளதாக மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காதி மூலம் வரும் வருவாய் 1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றார். மேலும், அதிகரித்து வரும் காதி, கைத்தறி விற்பனை புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் முன்னேறியுள்ளார். மகளிருக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடிய அவர் 631.5 புள்ளிகளைப் பெற்று 5ஆம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
43 வீராங்கனைகள் பங்குகொண்ட இந்த ஆட்டத்தில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 110 அடியை தாண்டிய நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் கே.என்.நேரு அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். இதனையடுத்து காவிரி ஆறு செல்லும் வழித்தடங்களுக்கு அருகில் சென்று, ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்க கூடாது என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.