India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசனும், நண்பராக சத்யராஜும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நாகர்ஜுனாவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால், வேறொரு தெலுங்கு நடிகரை படக்குழு அணுகி வருகிறதாம்.
*மேஷம் – பாராட்டு பெறுவீர்
*ரிஷபம் – நன்மை தேடி வரும்
*மிதுனம் – அமைதியாக இருந்து சாதிப்பீர்
*கடகம் – வீண் செலவுகளை தவிர்க்கவும்
*சிம்மம் – அச்சம் தவிர்க்கும் நாள்
*கன்னி – கவலை கொள்ள வேண்டாம்
*துலாம் – வரவு அதிகரிக்கும்
*விருச்சிகம் – தாமதம் ஏற்படும்
*தனுசு – ஜெயம் உண்டாகும்
*மகரம் – ஆதரவு கிடைக்கும் *கும்பம் – வெற்றி தேடி வரும் *மீனம் – ஆக்கப்பூர்வமான நாள்
இந்தியா-இலங்கை இடையிலான 2ஆவது T20 போட்டி, 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. பல்லேகலேவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த SL, 161/9 ரன்கள் எடுத்தது. பிறகு இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியபோது மழை குறுக்கிட்டது. இதனால், 8 ஓவர்களில் IND அணிக்கு 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ளது. தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி?
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை சரிவது தற்காலிகமானது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் ₹60,000 எட்டும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரட்டிப்பாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக நீண்ட நெடுஞ்சாலை ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. கடற்கரை நகரங்கள் அனைத்தையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை, 14,500 கி.மீட்டருக்கு நீள்கிறது. ஆஸ்திரேலியாவின் மத்தியப் பகுதிகள் பெரும்பாலும் பாலைவங்களாக இருப்பதால் இடையில் ஊடுருவிச் செல்லக்கூடிய சாலைகள் ஏதும் அங்கில்லை. ஆகையால் ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தியே மற்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் நாளை 2ஆம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல்கட்டமாக சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்ததைத் தொடர்ந்து நாளை காலை 11 மணி முதல் செப்டம்பர் 3 வரை , பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வு குறித்த விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலம் அறியலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய், ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார். அதில், பிரனாய் 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளார். புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் பிரனாய் மோதுகிறார்.
இந்தியா-இலங்கை இடையிலான 2ஆவது T20 போட்டி கனமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல்லேகலே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த SL, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் இலக்குடன், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் களமிறங்கினர். அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. IND அணி தற்போதுவரை 3 பந்துகளில் 6 ரன்களை எடுத்துள்ளது.
சில வழிமுறைகளை பின்பற்றி, வீட்டுக்கடனை எளிதாக அடைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். *ஒவ்வொரு ஆண்டும் தவணைத் தொகையை 10% அதிகரித்து கட்டலாம். உதாரணமாக, 8.5% வட்டியில் ₹50 லட்ச கடனுக்கான மொத்த தவணை காலம் 25 ஆண்டுகளாக இருக்கும் போது, ஆண்டுதோறும் 10% தவணையை அதிகரித்தால், 10 ஆண்டுகளிலேயே கடனை முடிக்க முடியும். *ஆண்டுக்கு ஒரு தவணையை அதிகமாக கட்டினால், 19 ஆண்டுகளில் கடனை முடித்து விடலாம்.
ஓர் ஆண்டில் 12 கிருத்திகை தினங்கள் இருந்தாலும், தை கிருத்திகை, திருக்கார்த்திகை மற்றும் ஆடிக்கிருத்திகை சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக, ஆடிக்கிருத்திகையில் ஆறுமுகனை வழிபட்டால் வாழ்வில் அல்லல்கள் அகலும் என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிக்கிருத்திகை நாளில் மல்லிகை, தாமரை, சிவப்பு நிற மலர்கள் கொண்டு முருகனுக்கு அர்ச்சனை செய்யலாம். அவல் பாயசம் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு நலன் தரும்.
Sorry, no posts matched your criteria.