India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணிப்பூரில் நடக்கும் வன்முறை போல், மகாராஷ்டிராவில் நடக்க இருந்ததாக NCP-SP தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களில் கூட கலவரங்கள் நடந்து வருவதாகவும், ஆனால் மகாராஷ்டிராவின் தலைவர்கள் சமூக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடித்ததால் அது தடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பல தலைமுறைகளாக ஒன்றாக வாழ்ந்த மணிப்பூர் மக்கள், இன்று ஒருவருக்கொருவர் பேசக்கூட தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், இந்த வெற்றியை நாட்டிற்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். பிரதமருடன் தொலைபேசியில் பேசிய அவர், டோக்யோ ஒலிம்பிக்கில் வெல்ல முடியாமல் போனது நீண்ட நாள் துயரமாக இருந்ததாகவும், தற்போது கனவு நனவாகிவிட்டதாகவும் கூறினார். மேலும், தன்னை ஆதரித்து அனைவரின் கனவும் நிறைவேறி விட்டதாக தெரிவித்தார்.
டெல்லியில் IAS பயிற்சி மையத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. உ.பியைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலங்கானாவின் தான்யா சோனி (25), கேரளாவின் நவீன் டால்வின் (28) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரேயா கடந்த ஏப்ரல் மாதமும், தான்யா ஒன்றரை மாதங்களுக்கு முன்பும் பயிற்சி மையத்தில் இணைந்துள்ளனர். நவீன் 8 மாதங்களாக டெல்லியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் இயங்கி வந்த 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. நேற்று முன் தினம் பெய்த மழையில் கட்டுமானத்தின் அடித்தளத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் பலியான நிலையில், கட்டுமான விதிகளை மீறியதாக சீல் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் டெல்லி முழுவதும் சோதனை நடத்தப்படும் என டெல்லி மேயர் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
இன்று (ஜூலை 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
இன்று (ஜூலை 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ₹5,557 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ➤ஜம்மு பிராந்தியத்தில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதன் எதிரொலியாக அங்கு கூடுதலாக 2000 ராணுவ வீரர்களை நிலை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ➤பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கரிடம் போனில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை பெருமையடையச் செய்துள்ளதாக வாழ்த்தியுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக திகழ்வதாகவும், இந்த பதக்கம் அடுத்தடுத்த போட்டிகளுக்கு உத்வேகமாக அமையும் எனவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், வீரர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த SL, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், 7.3 ஓவர்களுக்குள் 72 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 6.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.
Sorry, no posts matched your criteria.