India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அடுத்தடுத்து 4 படுகொலைகள் நடந்துள்ளதாக கூறி, இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகிவிட்டதாகவும், டாஸ்மாக், கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகரித்திருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கி, கொலை நாடாக மாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
➤சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது. ➤கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். ➤ஒரு சிந்தனைக்காக மனிதன் இறக்கலாம். ஆனால் அவனது சிந்தனைகள் அதன் பின் 1000 பேரிடம் செல்லும். ➤போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் அடித்து விடும். ➤நம்மை அடிமைதனத்திலேயே வைத்திருக்க பூமியில் எந்த சக்தியும் இல்லை. ➤தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதியுடையவன்.
சிறுவயதில் தந்தையை பார்க்கவே பயமாக இருந்ததால், அவரது கண்களை பார்த்ததே இல்லை என பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார். பெரிய பங்களா வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி சண்டையிடும் சத்தத்தை மாடிப்படியில் உட்கார்ந்து கேட்டதாகவும், தந்தை ஒருமுறை கூட தனது கையை பிடித்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன் மீதிருந்த அன்பை தந்தை ரிஷி கபூர் வெளிக்காட்ட இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு எதிராக தொடர்ந்து அத்துமீறினால், லிபியாவைப் போல் இஸ்ரேலுக்குள் துருக்கி ராணுவம் நுழையும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் எச்சரித்துள்ளார். இதை செய்யாமல் இருக்க எந்த காரணமும் இல்லை எனவும், இந்நேரத்தில் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளிடம் அவர் உரையாற்றினார். கடந்த 2020ல் ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட லிபிய அரசுக்கு ஆதரவளிக்க, துருக்கி தனது ராணுவத்தை அனுப்பியது.
மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் ஃபைசல் இன்று இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்தியா- மாலத்தீவு இடையேயான சுற்றுலா சார்ந்த உறவை மேம்படுத்தும் வகையில் டெல்லி உள்ளிட்ட 3 நகரங்களில் மெகா ரோடு ஷோவை தொடங்கி வைக்க உள்ளார். முன்னதாக பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால், அந்நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
*1948 – 2ஆம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் ஆரம்பமாயின. *1957 – பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமைக்கப்பட்டது. *1958 – அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. *1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக, இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கையெழுத்தானது.
சென்னை செம்மஞ்சேரியில் 14 வயது சிறுமியை பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்திய அவரது அக்கா உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். குழந்தைகள் நலவாரியம் அளித்த புகாரைத் தொடர்ந்து, சேலையூர் மகளிர் காவல்நிலையம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கே.கே.நகர், செங்கல்பட்டு உள்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2024 TNPL தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய நெல்லை அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அருண் கார்த்திக் 45 ரன்களை எடுத்தார்.
‘மகாராஜா’ படத்தின் ஹிந்தி உரிமையை நடிகர் அமீர் கான் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரே நடிக்க போகிறாரா அல்லது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்காக வாங்கியுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஜூன் 14ல் வெளியான இப்படத்தில் தந்தை – மகள் பாசம், சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றம், கிளைமேக்ஸ் ட்விஸ்ட் என விறுவிறுப்பாக கதை நகர்ந்ததால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 6 ▶குறள்: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். ▶பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
Sorry, no posts matched your criteria.