India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
G.O.A.T படத்தின் அடுத்த அப்டேட் ஆகஸ்ட் 1இல் வர உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், படம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 5இல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் தொடர்பாக அடுத்த அப்டேட் இருக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.
திமுகவை சேர்ந்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. திமுக கவுன்சிலர்கள் 22 பேர் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்ந்து 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் MI அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. DT, KKR, LSG உள்ளிட்ட பல அணிகள் இவரை ஏலத்தில் எடுக்க முனைப்புக் காட்டி வருகின்றன. MI அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்ற 5 முறை அந்த அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தாண்டு நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் ரோஹித் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்படுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப், அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்துள்ளார். வக்கீலாக பணியாற்றியபோது சான் பிரான்சிஸ்கோவை அழித்த கமலா ஹாரிஸ் அதிபரானால் ஒட்டுமொத்த நாட்டையும் அழித்து விடுவாரெனக் கூறிய அவர், அதே சமயம் தான் அதிபரானால் நாட்டில் நிலவும் குழப்பங்களைத் தீர்த்து, சட்ட ஒழுங்கு & நீதியை மீட்டெடுப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
அருள்நிதி நடித்த ‘டிமாண்டி காலனி 2’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள, இதில் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிசந்திரன், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து இன்னும் ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கவுள்ளதாக மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் குறைந்தபட்ச விலை ₹42ஆக உயர்த்த வலியுறுத்தி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு விலையை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்ஸின் வில்வித்தை போட்டியின் முடிசூடாத மன்னராக தென் கொரியா வலம் வருகிறது. 1988இல் சியோல் ஒலிம்பிக்ஸில் வில்வித்தை போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், தென் கொரியா பெண்கள் அணி வென்றது. அதன்பின், நடந்த எந்த ஒலிம்பிக்ஸிலும் ஒருமுறைகூட தங்கப்பதக்கத்தை வேறு எந்த நாடும் வென்றதில்லை. 1988 தொடங்கி 2020 வரையில் நடந்த 9 போட்டிகளைத் தொடர்ந்து 10ஆவது முறையாக பாரிஸிலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் 5 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.52 லட்சம் கனஅடியில் இருந்து 1.55 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 115.10 அடியை தாண்டியுள்ளது. நேற்று மேட்டூர் அணை திறக்கப்பட்ட போது, அணையின் நீர்மட்டம் 110 அடியாக இருந்தது. தற்போது வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு கால தாமதமின்றி உறுதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6- 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள், 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர ஏதுவாக, அந்தந்த பள்ளிகள் உறுதிச் சான்றிதழ் தர வேண்டும். ஆனால், சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கம்பீர் தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத வகையில் பந்தை வீசுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்ற அவர், எது சரியாக வருகிறதோ அதனை போட்டிகளில் செயல்படுத்த முயற்சிப்பேன் என்றார். இலங்கைக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் அவர் 3 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
Sorry, no posts matched your criteria.