India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
124 ஆண்டுகள் கழித்து பாரிஸில் நடக்கும் 33ஆவது ஒலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழாவைக் கொண்டாடும் வகையில் 4ஆவது நாளாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதில், வீட்டின் பால்கனியில் புறா நடன அசைவுகளை மேற்கொள்வதை பூனையொன்று ஜன்னல் வழியே பார்ப்பது போல குறியீடு வைக்கப்பட்டுள்ளன. Artistic Gymnastics போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர் அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஒரே நாளில் மட்டும் 3 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை அறிய இது ஒன்றே போதுமானது என்றார். குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மௌசம் நூர், இந்த தனிநபா் மசோதா தாக்கல் செய்துள்ளார். அதில், AI-ஐ பயன்படுத்தி பாகுபாடு காட்டக் கூடாது, தங்களை பாதிக்கும் முடிவுகளை நிராகரிக்க பணியாளர்களுக்கு உரிமை வழங்குவது போன்றவை வலியுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா மாநிலங்களவை விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்/மதிப்பெண் பட்டியல் ஆக.1 முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு www.dge.tn.gov.in-இல் பார்த்துக் கொள்ளவும்.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுகவை சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த 22 கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இன்று வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், போதுமான கவுன்சிலர்கள் வராததால் சிக்கல் நிலவி வருகிறது.
வெளிநாடு செல்லும் அனைவரும் வரித்துறையின் அனுமதிச்சான்றிதழ் பெற வேண்டும் என்ற
அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. அனுமதிச்சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் & அதிக அளவு வரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரி அனுமதி சான்றிதழ் தேவை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து, இன்று நண்பகல் 12 மணிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்படவுள்ளது. இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது. கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மனு பாக்கருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி பழுதானதால் முதல் சுற்றிலேயே வெளியேறிய மனு பாக்கர், தளராத முயற்சியினால், தற்போது பதக்கத்தை தன்வசமாக்கியுள்ளதாக பாராட்டி வருகிறார்கள். மேலும், 2 போட்டிகளில் அவர் விளையாட உள்ளதால் பதக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் காலிஸின் சாதனையை, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில், மிஸ்பா உல் ஹக் 21, வார்னர் 23 , பென் ஸ்டோக்ஸ்/ ஜாக் காலிஸ் – 24 ஷேன் ஷில்லிங்போர்டு – 25 பந்துகளில் அரைசதம் எடுத்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வரை 23 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அது 19 ஆயிரம் பேருந்துகளாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய
அவர், போக்குவரத்து துறையில் 25 ஆயிரம் காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.