India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணமில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, திருமங்கலம் சுற்று வட்டாரத்தில் நாளை கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தையில், உள்ளூர்காரர்கள் ஆதார் அட்டையை காட்டி கட்டணமின்றி பயணிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராஜ் ஷெட்டி இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், எதிரணி வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், இவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். நாளை காலிறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், இருவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிஹாரில் கல்வி, வேலைவாய்ப்பில் 65% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க, உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது, ஆளும் நிதிஷ்குமார் அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், SC,ST,OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 50% லிருந்து 65% ஆக உயர்த்தி, பிஹார் அரசு கடந்த நவம்பரில் சட்டம் கொண்டு வந்தது.
போக்குவரத்துத்துறையில் ஒப்பந்தப் பணியில் ஓட்டுநர், நடத்துநர் இடைக்கால நிவாரணமாகவே பணியமர்த்தப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். மே மாதம் ஏராளமானோர் ஓய்வு பெற்றதால், தற்காலிக நடவடிக்கையாக ஒப்பந்த முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நிரந்தரப் பணியாளர்கள் தேர்வானதும், ஒப்பந்தப் பணியாளர்கள் பணியில் இருந்து விலகி விடுவார்கள் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் தனிநபர் பிரிவின் குரூப் சுற்றில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்க்ஷயா சென் பெற்ற வெற்றியை நீக்குவதாக BWF அறிவித்துள்ளது. அந்த சுற்றில் அவருடன் மோதிய கார்டனுக்கு இடது முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து, அவர் ஒலிம்பிக்ஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இதன் காரணமாக ‘குரூப் L’இல் கார்டன் சம்பந்தப்பட்ட அனைத்து போட்டிகளின் முடிவுகளும் தற்போது நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செல்போனை 5 நிமிடங்கள் ஆஃப் செய்து வைப்பதன் மூலம் கார்பன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று கோவையில் நடந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ வானதி தெரிவித்துள்ளார். எனவே, ஒவ்வொருவரும் செல்போனை 5 நிமிடம் ஆஃப் செய்யுங்கள் என கேட்டுக்கொண்ட அவர், பிரதமர் மோடி சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 எம்பிக்கள் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து மாணவர்கள் இறந்த நிலையில், இதற்கு காரணமான 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மரண விவகாரம் தொடர்பாக உடனே விவாதிக்க எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழ்நாடு மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். முன்விரோதம் காரணமாகவே தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறுவதாக தெரிவித்த அவர், பழிக்கு பழியாக நடைபெறும் கொலைக்கு அரசாங்கம் எப்படி பொறுப்பாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொலைகளை வைத்து அரசியல் செய்ய இபிஎஸ் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக MLAக்களுக்கு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த உடன், அது ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. முதல் சுற்றில் 30,264 மாணவர்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 26,654 மாணவர்கள், 7.5% இட ஒதுக்கீட்டில் 1,343 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 2,267 மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 433 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,79,938 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளன.
Sorry, no posts matched your criteria.