India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் மாதிரியான இடங்களில் மது விற்பனை சாத்தியமா என பரிசீலிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஊழலை தடுக்க ரேஷன் கடைகளிலும், சூப்பர் மார்கெட்களிலும் மது விற்பனையை அனுமதிக்குமாறு, ஐடி ஊழியர் முரளிதரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஜியோ பாரத் J1 4G செல்ஃபோன், ₹1,799க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதில், Jio Money UPI பேமண்ட் வசதி, ஜியோ டிவியை நேரலையாக பார்க்கும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2.8 இஞ்ச் டிஸ்ப்ளேவுடன், 23 இந்திய மொழிகளுடன் இந்த ஃபோன் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதனை அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ மார்ட் போன்ற ஆன்லைன் சந்தைகளில் வாங்கலாம்.
நவ.1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறிய நடிகர் சங்கம், திரைத் தொழிலாளர்களை பாதிக்கும் இந்த முடிவை உடனே திரும்பப் பெற கோரிக்கை வைத்துள்ளது. மேலும், நட்புறவு பாதிக்காமல் இந்த பிரச்னைக்கு தீர்வு காண தயாரிப்பாளர் சங்கம் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகை ₹250லிருந்து ₹350ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுக்கான நிவாரணம் ₹6 லட்சமாகவும், நாட்டுப் படகுகளுக்கான நிவாரணம் ₹2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் தென் கொரிய வீரர்கள் வில்வித்தையில் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர். 1984 முதல் அவர்கள் வில்வித்தையில் 27 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஆரம்பப் பள்ளியில் இருந்தே அவர்களுக்கு வில்வித்தை கற்றுத்தரப்படுவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதற்காக உபகரணங்களை இலவசமாக கொடுக்கும் அரசு, கட்டணமும் வசூலிப்பதில்லை. தென் கொரிய மகளிர் அணி ஏற்கெனவே ஒலிம்பிக் 2024 தொடரில் தங்கம் வென்றுள்ளனர்.
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். திமுகவின் சட்ட போராட்டத்தால் கடந்த 3 ஆண்டுகளில் OBC மாணவர்களுக்கு 15,066 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் மாதம் வங்கிகள் 8 நாள்கள் இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆர்பிஐ தரவுகள்படி, ஆகஸ்ட் 4, ஆகஸ்ட் 11, ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய சனிக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்காது. அதேபோல, சுந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியும், கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஆகஸ்ட் 26ஆம் தேதியும் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் கள் விற்பனை சாத்தியமாகுமா என பரிசீலிக்க, அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் தரமான மது கிடைப்பதில்லை, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறிப்பிட்டு, ஐடி ஊழியர் முரளிதரன், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், கள் விற்பனை சாத்தியமா என ஆய்வு செய்து அறிவிக்க, அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸ் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தோற்கடித்தார். அவர்கள் இருவரும் 60ஆவது முறையாக நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில், ஜோகோவிக் 6 – 1, 6 – 4 என்ற நேர் செட் கணக்கில் நடாலை தோற்கடித்தார். இந்த இரண்டு ஜாம்பவான்களும் மோதும் கடைசிப் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. ஆடவருக்கான வில்வித்தையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்துள்ளது. காலிறுதியில் துருக்கி அணியை எதிர்கொண்ட இந்தியாவின் தருண்தீப், தீரஜ், பிரவீன் இணை 2- 6 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.