India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூரியும், தானும் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் என்பதால், மற்றவர்களின் வெற்றியை ஆரோக்கியமாகவே பார்ப்போம் என யோகிபாபு தெரிவித்துள்ளார். சூரிக்கும் சேர்த்து கோயிலில் அர்ச்சனை செய்ததாகவும், விடுதலை, கருடன் ஆகிய படங்களில் சூரியின் நடிப்பை பார்த்து மிரண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் போட்டி என்பது டீக்கடையில் நேரம் போக்குவதற்காக பேசப்படும் பேச்சு என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது. நாளை முதல் 4ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மக்களவையில் பாஜகவின் தலைமை கொறடாவாக சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 16 எம்பிக்கள் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இந்தியா கூட்டணி மற்றும் NDA கூட்டணி இடையே காரசார விவாதம் நடந்த நிலையில், இந்த நியமனம் நடைபெற்றது. தாமரையின் சக்கர வியூகத்தால் நாட்டில் அச்சமான சூழல் நிலவுவதாக பாஜகவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
நிதியாண்டிற்கான ITR கணக்கை நாளை (ஜூலை 31) சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விதிகளின்படி, டிச.31 வரை ITR தாக்கல் செய்யலாம், ஆனால் அதை இலவசமாக செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் வரை மட்டுமே. ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு ITR தாக்கல் செய்தால் ₹5,000, ₹5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ₹1000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும், வரித் தொகைக்கு வட்டியும் செலுத்த வேண்டும்.
➤ஒலிம்பிக் வரலாற்றில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற சாதனையை சாத்விக்-சிராக் படைத்துள்ளனர். ➤இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகை ₹250லிருந்து ₹350ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ➤ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட் மாதிரியா இடங்களில் மது விற்பனை சாத்தியமா என்பதை பரிசீலிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், காவலர்கள், பொதுமக்கள் என அனைவரையும் திமுகவினர் மிரட்டுவதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். டெண்டர் விடாமல் எப்படி சாலை போடப்பட்டது என உதவிப் பொறியாளர் கேட்டதற்கு சிவகங்கை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், ஆனால் முதல்வரோ, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தம்பட்டம் அடித்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் குறித்த டீப் ஃபேக் வீடியோவை பகிர்ந்ததற்காக எலான் மஸ்க் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். வீடியோவில் கமலா, ஜோ பைடனை முதியவர் எனவும், நாட்டை வழிநடத்த தனக்கு தெரியாது எனவும் பேசுகிறார். டிரம்ப், மஸ்க் போன்றோரின் பொய் தகவல்கள் மக்களுக்கு தேவையில்லை என கமலா கூறியுள்ளார். மஸ்கின் பதிவு X-இன் கொள்கையை மீறினாலும், அவர் உரிமையாளர் என்பதால் நடவடிக்கை இருக்காது என பலரும் விமர்சிக்கின்றனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமரானதை 5 ஆம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பாஜகவைப் பற்றி பேச உரிமை இல்லை எனவும் ஒரு கட்சியை ஒரு குடும்பமே அடிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
▶ஜூலை – 30 | ▶ஆடி – 14 ▶கிழமை: செவ்வாய் ▶திதி: தசமி ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:15 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 01:30 PM ▶சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்க இருந்த ‘புறநானூறு’ திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதற்கட்ட படப்படிப்பு தொடங்க உள்ளதாகவும், கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் சுதா இப்படத்தை இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.