news

News July 30, 2024

எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிறையில் சந்தித்த நிர்வாகிகள்

image

சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, அதிமுக சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். 100 கோடி நில அபகரிப்பு புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், திருச்சி முன்னாள் எம்.பி பரஞ்சோதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

News July 30, 2024

ஹாலிவுட் டெர்மினேட்டருக்கு இன்று பிறந்தநாள்

image

ஹாலிவுட் என்றதும் திரைப்பட ரசிகர்களுக்கு அர்னால்டு ஸ்வார்ஷ்னேக்கரின் நினைவு நிச்சயம் வரும். போஸ்டரில் அவர் படம் இருந்தாலே கண்ணை மூடிக் கொண்டு படத்திற்கு செல்லும் அளவுக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு. டெர்மினேட்டர், ப்ரீடேட்டர், டோட்டல் ரீகால், எக்ஸ்பென்டபிள்ஸ் என இவர் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இன்று அவர் தனது 77வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

News July 30, 2024

வீராங்கனைகளை விமர்சித்த வர்ணனையாளர் நீக்கம்

image

பெண்கள் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த வர்ணனையாளர் பாப் பல்லார்டை, யூரோஸ்போர்ட் டெலிவிஷன் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. பெண்களுக்கான 4×100 மீட்டர் நீச்சல் போட்டியில் ஆஸி., வீராங்கனைகள் பதக்கம் வென்ற போது, வர்ணித்த பல்லார்ட் “பெண்கள் மேக்கப்போட்டு தங்களை அழகுப்படுத்தி கொண்டு சுற்றி திரிவார்கள்” என்று கூறியிருந்தார். இதற்காக அவர் தனது எக்ஸ் பதிவில் மன்னிப்பு கோரியுள்ளார்

News July 30, 2024

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என்று கூறியுள்ளது.

News July 30, 2024

‘ராயன்’ படத்தை பாராட்டிய மகேஷ்பாபு

image

‘ராயன்’ படத்தை மிகச் சிறப்பாக இயக்கி, நடித்திருப்பதாக நடிகர் தனுஷை முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில, கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனவும் பதிவிட்டுள்ளார். இதற்கு படத்தில் நடித்த சந்தீப் கிஷன் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 26ஆம் தேதி வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

News July 30, 2024

கமலா ஹாரிஸ் வெற்றி பெற 41 நாள் ஹோமம்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற, தெலங்கானாவில் 41 நாள்கள் ஹோமம் நடத்தப்படும் என ஷியாமளா கோபாலன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் நல்லா சுரேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தெலங்கானாவில் 150 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் பள்ளி ஒன்று கட்டப்படும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக கமலா அதிபர் வேட்பாளராக வரவேண்டும் என சமீபத்தில் 41 நாள்கள் ஹோமம் நடத்தினார்.

News July 30, 2024

நீலகிரியில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அங்கு மொத்தமுள்ள 6 தாலுகாக்களிலும் (உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர்) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்றும் அங்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News July 30, 2024

சிறுநீர் மஞ்சள் நிறத்தில் செல்கிறதா?

image

சிறுநீர் ஏன் மஞ்சள் நிறத்தில் செல்கிறது? அதற்கு எப்படி தீர்வு காண்பது? என மருத்துவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். உடலில் போதிய நீரின்மை, காய்ச்சல், மதுபழக்கம், சிறுநீரகம், கல்லீரல் நோய் இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். போதிய தண்ணீர் குடிப்பது, மதுவை தவிர்ப்பது தீர்வைத் தரும். அதன்பிறகும் சிறுநீர் மஞ்சளாக சென்றால் மருத்துவரை அணுக அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News July 30, 2024

டி20 தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா?

image

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டியிலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

News July 30, 2024

BREAKING: கேரளாவில் மிகப்பெரிய நிலச்சரிவு

image

கேரள மாநிலம் வயநாடு அருகே முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கனமழை காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

error: Content is protected !!