news

News July 30, 2024

Missed Call கொடுத்து பேங்க் பேலன்ஸ் அறியலாம்

image

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுத்து, வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய முடியும். இதற்கு தனித்தனி எண்கள் உள்ளன. அவற்றை காணலாம். *SBI – 09223766666 *Indian Bank – 09289592895 *IOB – 84240 22122 *PNB – 1800 180 2223 * Canara- 09015483483 *Axis – 1800-419-5959 * City Union- 9278177444 * HDFC- 1800 270 333 *ICICI – 9594 612 612 *Karur Vysya- 09266292666.

News July 30, 2024

பள்ளி முகாமில் இருந்தவர்கள் நிலை என்ன?

image

கேரளாவில் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் பாதிப்புக்குள்ளான வயநாடு சூரல்மலையில் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முகாமாக செயல்பட்ட பள்ளி ஒன்றின் மீது அதிகாலையில் நிலச்சரிவு நேரிட்டதால், அங்கிருந்த 100க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை. மழை அதிகமானதால் அங்கிருந்த சிலர், முன்கூட்டியே வேறு முகாமிற்கு மாற்றப்பட்டதால் அவர்கள் உயிர்தப்பினர்.

News July 30, 2024

செவ்வாய்க்கிழமை எந்த கோயிலுக்கு செல்லலாம்?

image

வார நாள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாளாகவும், அந்த நாளில் அக்கடவுள் குடிகொண்டுள்ள கோயிலுக்கு சென்று மனமுருகி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்றும் ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (இன்று) அனுமனுக்கு உகந்த நாளென்றும், இந்நாளில் அனுமன் கோயில் சென்று அவருக்குப் பிடித்த வடை, வெண்ணெய் சாற்றி வழிபட்டால் வேண்டியது நிறைவேறுமென்று கூறப்பட்டுள்ளது.

News July 30, 2024

தமிழகம் வழியே 12 நாள்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்

image

எர்ணாகுளம்-பெங்களூரு இடையே வாரம் 3 நாள்களுக்கு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே 12 நாள்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு நாளை, ஆக 2, 4, 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25 தேதிகளில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ஆக 1, 3, 5, 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26 தேதிகளில் இயக்கப்படுகிறது.

News July 30, 2024

பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி, ராகுல் பேச்சு

image

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி, ராகுல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வயநாடு <<13736464>>நிலச்சரிவு<<>> குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, தற்போதைய நிலவரம், மீட்பு பணிகள் குறித்து கேட்ட அவர்கள், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ₹2 லட்சம் இழப்பீடு, காயமடைந்தோருக்கு ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.

News July 30, 2024

பள்ளிகளே இல்லாமல் பட்டம் எப்படி?: முத்தரசன்

image

தொல்லியல் துறைத் தேர்வு, அருங்காட்சியக பணிகளுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற TNPSC-ன் அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் எதிலும் சமஸ்கிருத பாடம் இல்லாத நிலையில், அதில் எவ்வாறு பட்டம் பெற முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், தேர்வாணையத்தின் அறிவிப்பை ரத்து செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 30, 2024

இன்றும் தங்கம் விலை குறைவு

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து ₹51,080க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹6,385க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ₹89க்கும், கிலோவிற்கு ₹500 குறைந்து ₹89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News July 30, 2024

சர்தார் 2 திரைப்படத்தில் 3 ஹீரோயின்கள்!

image

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2022இல் வெளியான சர்தார் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அதன் 2ஆவது பாகம் சர்தார் 2 என்ற பெயரில் உருவாகிறது. இதில் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் மாளவிகா மோகனன், பிரியங்கா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News July 30, 2024

TNPL: தகுதி சுற்று போட்டிகள் இன்று தொடக்கம்

image

டிஎன்பிஎல் முதலாவது தகுதி சுற்றில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், திருப்பூர் அணியும் இன்று மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் (சேப்பாக் அல்லது திண்டுக்கல் அணி) 2ஆவது தகுதி சுற்றில் மோதும்.

News July 30, 2024

பிரபல யூடியூபர் பிரியாணி மேன் கைது

image

பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரவியை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இர்பான் உள்ளிட்ட யூடியூபர்களை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால், இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். தொடர்ந்து, யூடியூப் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற அவரை அவரது தாயார் தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவர் கைதாகியுள்ளார்.

error: Content is protected !!