India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய மகளிர் அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை விரைவில் கண்டறிவது அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ஷஃபாலியும், ஸ்மிருதி மந்தனாவும் சிறப்பான தொடக்கத்தை வழங்குவதாகத் தெரிவித்த அவர், 3ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடக்கூடிய வீராங்கனையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், எதிர்வரும் டி20 உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்றார்.
1900ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆங்கிலோ இந்தியரான நார்மன் பிரிட்சார்ட் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றார். அதன்பிறகு, கடந்த 124 ஆண்டுகளில் இந்தியா சார்பில் வேறு யாரும் ஒரே ஒலிம்பிக்ஸில் 2 பதக்கங்களை வென்றதில்லை. இந்நிலையில், 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸில் மனு பார்க்கர், தனிநபர், கலப்பு இரட்டை பிரிவு துப்பாக்கிச்சுடுதலில் 2 வெண்கலம் வென்று புது வரலாறு படைத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இப்புராஹிம், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இப்புராஹிம் ₹70 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று சிக்கினார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்து விமர்சித்த நிலையில், அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இவிஎம் வாக்குகளையும், விவிபாட் ஒப்புகை சீட்டையும் 100 சதவீதம் சரிபார்க்க முடியாது என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு, ஏற்கெனவே தாங்கள் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான எந்த காரணம் இல்லை என்ற கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் 2ஆவது பதக்கத்தை இந்தியா வென்றுள்ளதற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மனு பார்க்கர், சரப்ஜோத் சிங்கிற்கு வாழ்த்துகள். 2 பேரும் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளனர். குழுவாக இணைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று பாராட்டியுள்ளார். இந்த வெற்றியை கண்டு, இந்தியாவே மகிழ்ச்சியில் உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் <
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்ததாக, நடிகர் விஜய் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸில் கலப்பு இரட்டையருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பார்க்கர், சரப்ஜோத் சிங் இணை 16-10 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. ஏற்கெனவே மகளிர் தனிநபர் பிரிவில் மனு பார்க்கர் வெண்கலம் வென்றிருந்தார். ஆதலால் இது அவரின் 2ஆவது பதக்கம். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையை பார்க்கர் படைத்தார்.
மலை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி, வயநாடு நிலச்சரிவின் மூலம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்த அவர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரயில்வேயில் 7,951 இளநிலை பொறியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதில் 7,934 இடங்கள் இளநிலை பொறியாளர்களுக்கானது. எஞ்சிய பணியிடங்கள், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், கெமிக்கல் மேற்பார்வையாளர் உள்ளிட்டவற்றுக்கானது. <
Sorry, no posts matched your criteria.