India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா இலங்கை இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் மைதானத்தில் மூடப்பட்டிருந்த தார்பாய்கள் அகற்றப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் டாஸ் போடப்படும் எனத் தெரிகிறது. மழையின் தாக்கம் பெரிதாக இல்லாததால், போட்டிக்கான ஓவரில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
RCB அணியின் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக விளையாடலாம் என தெரிகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் சரியாக விளையாடாத காரணத்தால், RCB அணி அவரை
தக்கவைத்துக்கொள்ள விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அடுத்த சீசனில் அவரை ஏலத்தில் எடுக்க CSK, DC, PBKS அணிகள் ஆர்வம் காட்டுவதாகவும், அதில் CSK அணிக்கு அவர் வரலாம் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
2014 -2023 வரை மோடி தலைமையிலான மத்திய அரசு சுமார் 12.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நலன் குறித்து முதலை கண்ணீர் வடிக்கும் காங்., தனது ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என விமர்சித்த அவர், மோடி அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், வேலையின்மை அளவு 2022-23ஆம் ஆண்டில் 3.2% குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கேரளாவில் நேரிட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. மேலும், நிலச்சரிவு நிகழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் மீட்பு மற்றும் சீரமைப்புப்பணிகளுக்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதியுதவியை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
2028 அமெரிக்க ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். பாரிஸில் ‘ஒலிம்பிக் கிரிக்கெட்’ தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், “ஆண்கள், பெண்கள் இருவருக்குமான கிரிக்கெட்டும் 2028 அமெரிக்க ஒலிம்பிக்கில் இடம்பெற வாய்ப்புள்ளது” என்றார். இதுவரை ஒலிம்பிக்கில் ஒரே ஒருமுறை மட்டும் <<13734877>>கிரிக்கெட் <<>>நடந்துள்ளது.
குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் டாப் 5 வங்கிகளை அறிந்து கொள்வோம். ஐசிஐசிஐ வங்கி 10.65%, HDFC வங்கி 10.75%, கோடக் மஹேந்திரா வங்கி 10.99%, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 11.15%, பஞ்சாப் நேஷனல் வங்கி 12.75% வட்டியில் தனிநபர் கடன் வழங்குகின்றன. இந்த விகிதம், நீங்கள் பணிபுரியும் நிறுவனம், சம்பளம் மற்றும் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மாறுபடலாம். கூடுதல் விவரங்களுக்கு வங்கிக்கிளையை அணுகவும்.
வடலூரில் ஈட்டி தாக்கி மாணவன் மூளைச்சாவு அடைந்த விவகாரத்தில், பள்ளியின் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு மைதானத்தில் சிலம்பம் பயிற்சி செய்து கொண்டிருந்த மாணவன் கிஷோரின் தலையில் வேறு ஒரு மாணவர் வீசிய ஈட்டி தாக்கியது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிஷோர், நேற்று மூளைச்சாவு அடைந்தார். இந்த விவகாரத்தில் பிடி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் சரப்ஜோத் சிங், விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஹரியானாவைச் சேர்ந்த இவர், 13 வயதில் கால்பந்து வீரராக விரும்பினார். பின்னாளில் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் அதிகரித்ததால், அதில் கவனம் செலுத்தினார். ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் பெற்றோரின் அனுமதியுடன் 2019 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு தங்கம் வென்றார்.
சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக உண்ணாவிரதம் அறிவித்துள்ள அதிமுக, போராட்டத்திற்கு அனுமதி கோரியிருந்தது. இதற்கு, மனுதாரர் கோரும் இடத்தில் அனுமதி அளிக்கப்படுவதில்லை என பதிலளித்த காவல்துறை, மாற்று இடத்தில் போராட்டம் நடத்தலாம் என தெரிவித்தது.
ஒரு மாநிலத்தின் பெயர் பட்ஜெட்டில் இல்லை என்றால், அந்த மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக அர்த்தம் இல்லையென நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் தாக்கல் செய்த 2004-2005 மத்திய பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம் பெறவில்லை என அவர் பதிலளித்தார்.
Sorry, no posts matched your criteria.