India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த 3ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த IND, 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய SL, அதே 137 ரன்களை எடுத்ததால் சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதில் 2 விக்கெட் இழப்பிற்கு 2 ரன்களை மட்டுமே இலங்கை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார்.
➤கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பார்க்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு இது 2வது பதக்கமாகும். ➤வயநாட்டில் பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123ஆக அதிகரித்துள்ளது. ➤கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் அபராதமாக ₹8,500 கோடி வசூலித்துள்ளன.
சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என திமுக உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அதற்கு காரணம், சாதி விகிதாசாரப்படி இட ஒதுக்கீட்டை மாற்றுவதற்காகதான். இட ஒதுக்கீட்டினால் சாதி வளர்வதாக பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் சாதியை ஒழிக்க கொண்டு வரப்பட்டதே இட ஒதுக்கீடு. எந்த சாதி எத்தனை சதவீதம் உள்ளதோ, அதன் அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிப்பதே இட ஒதுக்கீடு.
பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ள இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது நார்வே வேறுபட்டு நிற்கிறது. அதாவது, உபரி தொகையுடன் அந்நாடு பட்ஜெட்டை திட்டமிடுகிறது. காரணம் அந்நாட்டின் வருமானம், செலவீனத்தை விட அதிகமாக உள்ளது. அதே நேரம் வசதியான சூழலில் வாழும் அந்நாட்டு மக்கள், வசதி வாய்ப்பில்லாத வெளிநாட்டு மக்களை கண்டு குற்றவுணர்ச்சி அடைவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், கடந்தாண்டு ₹1.50 லட்சம் கோடி மதிப்பிலான தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சேவைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. AI மற்றும் blockchain போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*மேஷம் – பொறுமை அவசியம்
*ரிஷபம் – ஆக்கப்பூர்வமான நாள்
*மிதுனம் – ஆதாயம் கிடைக்கும்
*கடகம் – நலம் உண்டாகும்
*சிம்மம் – பக்திகரமான நாள்
*கன்னி – தாமதம் ஏற்படும்
*துலாம் – போட்டியை தவிர்க்கவும்
*விருச்சிகம் – சிறப்பான நாள்
*தனுசு – மகிழ்ச்சி அதிகரிக்கும்
*மகரம் – வெற்றி கிடைக்கும் *கும்பம் – பயம் தவிர்க்கவும் *மீனம் – ஏமாற்றம் ஏற்படும்
TNPLஇல் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி கோவை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது . திருப்பூர் அணி நிர்ணயித்த 201 ரன்கள் இலக்கை துரத்திய கோவை அணியில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் (123*), முகிலேஷ் (48*) ரன்கள் அடித்தனர். இதையடுத்து 18.5 ஓவரில் இலக்கை எட்டி கோவை அணி அபார வெற்றிபெற்றது. இறுதிப் போட்டி ஆக.4 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மின்சார வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், டெஸ்லாவின் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த விலை மாடலை உருவாக்க நினைத்தால் மகாராஷ்டிராவிலும், ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்தால் தமிழ்நாட்டிலும், மானியங்களை எதிர்பார்த்தால் குஜராத்திலும் ஆலை அமைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
TNPLஇல் திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய கோவை அணி வீரர் சாய் சுதர்சன் 49 பந்துகளில் சதம் அடித்துள்ளார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிவரும் இவர் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் விளாசி 105* ரன்களுடன் கோவை அணிக்கு நம்பிக்கை அளித்துவருகிறார். இவரது அதிரடியால் கோவை அணி 18 ஓவரில் 184/3 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
நாளைக்குள் (ஜூலை 31) விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகளுக்கு PM கிஷான் நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுதோறும் ₹6000ஐ, 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ், பட்டா உள்ளிட்ட விவரங்கள், e-KYC பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, விவரங்களை பதிவு செய்யாதவர்களுக்கு 18ஆவது தவணை ₹2000 கிடைக்காது என எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.