India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள அவர், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 8 ▶குறள்: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. ▶பொருள்: அறக்கடலாக விளங்கும் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குநர் அட்லியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க போவதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்க இருந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ம்ம்ம்ம்ம்
ஹைதராபாத் அருகே ஓடும் பேருந்தில் 26 வயது இளம்பெண்ணை 2 ஓட்டுநர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சித்தையா என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான கிருஷ்ணாவை தேடி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஹைதராபாத்தில் நடந்த 2ஆவது சம்பவமாகும். முந்தைய சம்பவத்தில், புது வேலை கிடைத்ததற்காக இளம்பெண் பார்ட்டி வைத்தபோது, நண்பர் மற்றும் அவரது உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்திக்க இருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக, அங்கு விமான தரையிறங்குவதில் சிக்கல் இருப்பதால் அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில், விரைவில் வயநாடு வருகை தருவதாகவும், நிலமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்கை கமல்ஹாசன் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தியர்களை பெருமையடையச் செய்ததாகவும், பிடி உஷா, கர்ணம் மல்லேஸ்வரி, மேரி கோம் உள்ளிட்ட ஜாம்பவான்களின் வரிசையில் இருவரும் இணைந்துள்ளதாகவும் வாழ்த்தியுள்ளார். மேலும், இருவரின் வெற்றியும் அடுத்த தலைமுறையினருக்கு உத்வேகமாக அமையும் என கூறியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறினார். அப்போது பாஜக எம்பி அனுராக் தாக்கூர், சாதி என்னவென்று தெரியாதவர்கள், கணக்கெடுப்பு பற்றி பேசுவதாக கூறவே, எதிர்கட்சி எம்பிக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய ராகுல், தன்னை எத்தனை முறை இழிவுபடுத்தினாலும், நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மசோதா நிறைவேற்றப்படும் என உறுதியுடன் கூறினார்.
இன்று (ஜூலை 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளார். சூரல்மலையில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்த, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (60) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து கட்டட வேலைக்குச் சென்ற காளிதாஸ் என்பவர் உயிரிழந்த செய்தி வெளியானது. இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.