India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட அந்த அணிக்கு சரீத் அசலங்கா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். தாெடக்க ஆட்டக்காரர் நிஷாந்த் மாதுஸ்கா அணியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். பதிரனாவும் நீண்ட நாள்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். இருஅணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடர் வரும் 2ஆம் தேதி தொடங்குகிறது.
INDIA கூட்டணிக்கு தேசிய சிந்தனை கிடையாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ராகுல் தொடர்ந்து கூறி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், பலமுறை அறிவுறுத்தியும் அதே தவறை மீண்டும் செய்வதாக விமர்சித்துள்ளார். இந்திய மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் கருத்தை கூறாமல், அரசியல் செய்ய வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் நோக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
2023-2024ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆதலால் உடனே கணக்கு தாக்கல் செய்ய வருமான வரித்துறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இல்லையேல் நாளை முதல் ₹5,000 அபராதத்துடன் (ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கும் கீழ் இருப்போருக்கு ₹1,000 அபராதம்) தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
OLYMPICS பதக்கப் பட்டியலில் நேற்று பிரான்ஸ் 2, சீனா 3ஆவது இடங்களில் இருந்தன. இந்நிலையில், இன்று பிரான்ஸ் 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு சீனா 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் (7 தங்கம் உள்பட 13 பதக்கங்கள்) முதலிடத்திலும், சீனா (6 தங்கம் உள்பட 14 பதக்கம்) 2ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா (6 தங்கம் உள்பட 11 பதக்கம்) 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா (2 வெண்கலம்) 33ஆவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் மின்பயன்பாடு யூனிட்டை கொண்டு, அதற்கான மின் கட்டணத்தை நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதற்காக மின்சார வாரியத்தின் <
31ஆம் தேதி பிறந்தவர்களுக்கான பலன் குறித்து நியூமராலஜியில் என்னக் கூறப்பட்டுள்ளது என பார்க்கலாம். * நம்பிக்கைக்கு உரியவர்கள் * மரியாதையாக நடந்து கொள்வார்கள் *எளிமையாக இருப்பார்கள் *சிரித்த முகத்துடன் காட்சியளிப்பர் *உதவியர்களை என்றும் மறக்க மாட்டார்கள் *புத்திசாலிகள் * எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் * அனைத்தையும் திட்டமிட்டு செய்பவர்கள் *நல்ல நினைவாற்றல் கொண்டவர்கள்.
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ₹100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை, கடந்த 16ஆம் தேதி கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்றிரவு நடந்தது. அதில், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
ரன் இயந்திரம் போல வீரர் ஒருவர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்களை குவித்துள்ளார். அவர் யார் தெரியுமா? இங்கிலாந்து அணிக்காக 1908- 1930 வரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாக் ஹோப்ஸ்தான் அவர். டெஸ்ட் தவிர 1905- 1934 வரை சர்ரே அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மொத்தம் 199 சதங்களும், 61,760 ரன்களும் குவித்துள்ளார். அவரது இச்சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. அந்த புதன்கிழமை எந்த கடவுளை வணங்கினால், மிகவும் சிறப்பு என்பது குறித்து ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை தோறும் முழுமுதற் கடவுளான விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும் என்றும், விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை படைத்தும், அருகம்புல் சாற்றியும் வழிபட்டு வந்தால் அனைத்து காரியமும் வெற்றியடையும் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.