India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியன் வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 1,500 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயதிற்கு உட்பட்டவராகவும், பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, indianbank.in என்ற இணையத்தளத்தில், விண்ணப்ப கட்டணமாக ₹500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று காலை அவர் சென்றார். அப்போது, மஞ்சேரி அருகே அவரது கார் கட்டுபாட்டை இழந்து மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்திய அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் டி20 போட்டியில் அதிகமுறை தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. அந்த அணி இதுவரை 105 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் 104, வெஸ்ட் இண்டீஸ் 101, ஜிம்பாப்வே, நியூசிலாந்து தலா 99 தோல்விகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவிடம் இலங்கை அணி நேற்று சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது.
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டிருப்பது மத்திய கிழக்கு ஆசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக அவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரானில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த இஸ்மாயில், அவரது பாதுகாவலர் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு இஸ்ரேலே காரணமென்றும் ஹமாஸ் கூறியுள்ளது.
ITR கணக்கு தாக்கல் செய்ய <
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை மாற்றி அமைக்க 8வது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. 2014ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, 2026ம் ஆண்டு 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.
சூப்பர் ஓவரை தன்னை நம்பி கொடுத்த கேப்டன் சூர்யகுமாருக்கு வாஷிங்டன் சுந்தர் நன்றி தெரிவித்துள்ளார். கடின உழைப்பும், கடவுளின் ஆசிர்வாதமும் தன்னை சிறப்பாக செயல்பட செய்ததாகக் கூறிய அவர், சூப்பர் ஓவர் வீசும் நேரத்தில் அமைதியாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன் என்றார். இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், சூப்பர் ஓவர் வீசிய அவர், 2 ரன்களில் இலங்கையை ஆட்டமிழக்க செய்தார்.
ஆந்திரா, பிஹாருக்கான நிதி ஒதுக்கீடு வீழ்ச்சியடைந்த வங்கியின் பின்தேதியிட்ட காசோலை என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இந்த 2 மாநிலங்களுக்கும் மோடி நிச்சயமில்லாத வாக்குறுதிகள் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், தெளிவான வாக்குறுதி இல்லாமல் மேலும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 2 மாநிலங்களுக்குமான நிதி ஒதுக்கீடு பல கோடியை கடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாலையோரம் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் நோக்கில் போர்டுகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்றுதான், சிவப்பு கோடு கொண்ட முக்கோணத்திற்குள் வெள்ளை நிற பின்னணியில் 4 கரும்பு புள்ளிகளை கொண்ட போர்டு. இதற்கு என்ன அர்த்தம் என பார்க்கலாம். அப்பகுதி கண் பார்வையற்றோர் நடமாட்டம் இருக்கும் இடம். ஆதலால், அப்பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்லக்கூடாது. எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெரியசாமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.