India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல் பாகத்தில் அனைவரும் இறந்துவிடும் நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு தரமான ட்விஸ்டுடன் 2ஆம் பாகத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து எடுத்துள்ளார். படத்தில் வரும் திகில் காட்சிகள் சீட்டின் நுணிக்கு ரசிகர்களை தள்ளி விடுகிறது. இரண்டு பாகங்களையும் இணைக்கும் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. அருள்நிதியும், பிரியா பவானி சங்கரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். Way 2 News ரேட்டிங் 3/5.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த இளம்பெண், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, அவரது டைரியை அவரது தந்தை நேற்று போலீஸில் ஒப்படைத்தார். தான் கொலை செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக டைரியில் அவர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். தான் எம்.டி. படிப்பில் தங்கப் பதக்கம் பெற வேண்டும் என அவர் எழுதி இருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான சேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு கடலூர் – புதுச்சேரி சாலையில் தொடர்ந்து ஹாரன் அடித்ததாக கூறி தனியார் பேருந்து ஓட்டுநரிடம் சேரன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பேருந்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சியில் பதிவான வீடியோ சாட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின உரை நேரத்தில், பிரதமர் மோடியே, அவரது சாதனையை முறியடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு மோடி 96 நிமிடங்கள் உரையாற்றியதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்நிலையில், இன்று 98 நிமிடங்கள் உரையாற்றி, அவரது சாதனையை, அவரே கடந்துள்ளார். தொடர்ச்சியாக 11 முறை மோடி சுதந்திர தின உரையாற்றியுள்ள நிலையில், அவரது சராசரி உரை நேரம் 82 நிமிடங்கள் ஆகும். வேறு எந்த இந்திய பிரதமரும் இவ்வளவு நேரம் உரையாற்றியதில்லை.
குறைந்த நேரம் சுதந்திர தின உரையாற்றிய இந்திய பிரதமர்கள் பற்றி பார்க்கலாம். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர், சுருக்கமாக சுதந்திர தின உரையாற்றிய பிரதமர்கள் ஆவர். 1954 ஆம் ஆண்டு நேரு 14 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிய நிலையில், 1966 ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் வெறும் 14 நிமிடங்களே உரை நிகழ்த்தியுள்ளார். நேருவின் அதிகபட்ச சுதந்திர தின உரை நேரம் 72 நிமிடங்கள் ஆகும்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திமலை, ராணிப்பேட்டையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நாளையும் 12 மாவட்டங்களில் கனமழையும், நீலகிரி, கோவையில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
விமான நிலையத்தில் உச்சரிக்க கூடாத வார்த்தைகள் சில உள்ளன. அதை மீறி உச்சரித்தால் சட்ட நடவடிக்கைகள் பாயும். பயங்கரவாதி, வெடிகுண்டு, ஏவுகணை, துப்பாக்கி அல்லது ஆயுதங்கள், தீ, கடத்தல் உள்ளிட்ட வார்த்தைகளை பேசக்கூடாது. பாதுகாப்பு சோதனையின் போது, கோபத்தில் பையில் வெடிகுண்டா இருக்கிறது என பேசியதற்காக டெல்லி மற்றும் கொச்சி விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோலார் தங்க வயலில் தங்கம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பா.ரஞ்சித் தனது ஸ்டைலில் கூறியுள்ளார். வலுவான முதல் பாதி ரசிகர்களை கட்டிபோடுகின்றது. விக்ரமின் அபார நடிப்பும், G.V.பிரகாஷின் வெறித்தனமான இசையும் படத்தின் முழு பலமாக உள்ளது. மாளவிகா மோகனனும் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர் வரும் காட்சிகள் கனெக்ட் ஆகவில்லை. 2ஆம் பாதி சற்று தொய்வு கொடுக்கிறது. Way2News ரேட்டிங் 3/5.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி கிடைத்துள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், 2026 ஜனவரி மாதத்திற்குள் (அடுத்த 16 மாதங்களில்) காலியாக உள்ள 75,000க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். இது, பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால் அந்த ரூட்டில் மேம்பாலங்கள் அதிகம் இருப்பதால் இத்திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது குறைந்த உயரத்திலான ரயில் பாலம் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் திட்ட அறிக்கை ஒரு வாரத்தில் தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.