news

News July 31, 2024

வயநாடு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 140 மி.மீ. மழை

image

வயநாட்டில் சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து 2 பெரிய நிலச்சரிவுகள் நிகழ அம்மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையும் ஒரு காரணமாகும். அங்கு திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 144 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பல பகுதிகளில் 300 மில்லி மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது. இது இந்திய வானிலை மையம் எதிர்பார்த்ததை விட 5 மடங்கு அதிகமாகும்.

News July 31, 2024

ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி

image

பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒருமுறை அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார் எனவும், அதன்படி தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பரிசோதனைகள் முடிந்ததும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிய வந்துள்ளது.

News July 31, 2024

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பம் தொடக்கம்

image

2024-25ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஆக.8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

News July 31, 2024

ஆற்றில் மிதந்து வந்த 66 உடல்கள்

image

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 66 பேரின் உடல்கள் பல கிலோ மீட்டர் தூரம் ஆற்றில் மிதந்து வந்ததை பார்த்து மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதில் 26 பேரின் உடல்கள் முழுமையாகவும், 40 பேரின் உடல்கள் தலை, கால் துண்டாகி சிதைந்த நிலையிலும் மலப்புரம் சாலியாற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு கொடூரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இந்த ஒரு புகைப்படமே சான்று.

News July 31, 2024

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு

image

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 19இல் வெளியாகும் என்று தெரிவித்தார்.

News July 31, 2024

Olympics 2024: 7 மாத கர்ப்பத்துடன் வாள் வீசிய வீராங்கனை

image

எகிப்து வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ் 7 மாத கர்ப்பத்துடன், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர்,” களத்தில் 2 பேர் இருந்ததாக நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், மற்றொன்று எதிரணி வீராங்கனை, மூன்றாவது இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டி குழந்தை” என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

News July 31, 2024

வெள்ளி விலை ஒரே நாளில் ₹2000 உயர்வு

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹91க்கும், கிலோ வெள்ளி ₹2,000 உயர்ந்து ₹91,000க்கும் விற்பனையாகிறது. பட்ஜெட் நாளான ஜூலை 23ஆம் தேதி ₹92,500ஆக இருந்த கிலோ வெள்ளி விலை மெல்ல குறைந்து நேற்று ₹ 89,000க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ₹2000 அதிகரித்துள்ளது.

News July 31, 2024

மோடி உடனான சந்திப்பை ரத்துசெய்தாரா ஸ்டாலின்?

image

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்தது அனைவருக்கும் தெரியும். ஆனால்
நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லும்போது, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் பட்ஜெட்டில் தமிழகம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால், அதையும் ஸ்டாலின் ரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக எதிர்ப்பு நிலையை தொடர்ந்து கடைபிடிக்க அவர்
முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

News July 31, 2024

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

image

கடந்த சில நாள்களாக இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து, ஒரு சவரன் ₹51,360க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ஒரு கிராம் ₹6,420க்கும் விற்பனையாகிறது. இதனால், விரைவில் சவரன் விலை ₹51,000க்கு கீழ் செல்லும் என எதிர்பார்த்து காத்திருந்த நடுத்தர மக்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

News July 31, 2024

ஆம்ஸ்ட்ராங் கேங்ஸ்டரா? ஆனந்தன் மறுப்பு

image

ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞராக இருந்ததால் அவரை தேடி வழக்குத் தொடர்பாக வருவோருக்கு உதவியுள்ளதாகவும், அதனால் அவரை கேங்ஸ்டர் எனக் கூறுவது தவறு என்று பிஎஸ்பி மாநில புதியத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். தலித் தலைவராக மட்டுமல்லாது, அனைத்து சமூகத் தலைவராகவும் ஆம்ஸ்ட்ராங் வளர்ந்து வந்ததாகவும், இதை ஏற்க முடியாதோர், ரவுடிகளை ஒருங்கிணைத்து அவரை படுகொலை செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!